இடுகைகள்

ஆகஸ்ட் 8, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனைவி

கல்யாணம் பண்றதுல தப்பில்லை! நல்ல மனைவி அமைந்தால், உங்கள் வாழ்கையில் சந்தோஷம்! இல்லையென்றால் நீங்க தத்துவஞானி!! - சாக்ரடீஸ் தீவிரவாதத்தை பற்றி எனக்கு பயமில்லை, ஏன்னா..நான் கல்யாணம் முடிச்சு 2 வருசம் ஆகுது! - சேம் கினிசன் எனக்கு நடந்த இரண்டு கல்யாணத்திலும் ராசியில்லை.. முதல் மனைவி என்னை விட்டு போயடவிட்டாள்! இரண்டாவது மனைவி இன்னம் கூடவே இருக்கா!! - பேட்ரிக் முரே உலத்திலேயே கடினமான கேள்வி - பெண்களுக்கு என்ன வேண்டும்? என்பதுதான் - சிக்மென்ட் பிராட். ஒரு நல்ல அருமையான வழி உங்கள் மனைவியின் பிறந்தநாளை ஞாயாபகம் வைத்துக்கொள்ள.. ஒரு தடவை அதை மறப்பதுதான்! - பிராங்களின். ஒரு நல்ல மனைவி எப்பொழுதும் கனவனை மன்னித்துவிடுவாள், அவள் பக்கம் தப்பு இருந்தால்.. - மில்டன் பியர்லி சந்தோஷமான திருமண வாழ்கையென்பது கொடு பெரு என்ற தத்துவத்தின் அடிப்படைதான். கணவர் கொடுக்கனும்! மனைவி வாங்கிக்கனும்!! - யாரோ "காதல் என்பது நீண்ட அழகான கனவு! கல்யாணம் என்பது அலாரம்!!" - இயான் வுட் பெண்னுக்கு எல்லாமும் வேண்டும், ஒரே "ஆண்" னிடம்!ஆனுக்கு ஒன்றே ஒன்று வேண்டும், எல்லா "பெண்" னிடம்!!

பெண்கள் புடவை

படம்
புடவை ஒரு பர்பெச்சுவல் கிப்ட். பெண்கள் என்ன படித்திருந்தாலும், எந்தப் பதவியில் இருந்தாலும், (முப்பதுக்கு மேல்) என்ன வயசாக இருந்தாலும் அவர்களிடம் எத்தனை புடவைகள் இருந்தாலும்…அவர்களுக்கு ஒரு புடவை பரிசளிக்கிற போது குழந்தை மாதிரி சந்தோஷப் படுகிறார்கள். சேலத்தின் பிரபல ஜவுளிக்கடை ஒன்றுக்கு நேற்று போயிருந்தோம். எதைப் பார்த்தாலும் “ப்ச்.. இது ஏற்கனவே இருக்கு” என்று ஒதுக்கிக் கொண்டிருந்தாள் என் மனைவி. பக்கத்தில் ஒரு பெண்கள் கூட்டம் உற்சாகமாக புடவைகளை தேர்ந்தெடுத்து குவித்துக் கொண்டிருந்தது. “அங்கே பாரு. அவங்க ஆட்டிட்யூட்லேயே உப்பு-புளி-மொளகா மாதிரி மாசா மாசம் புடவை வாங்கற கூட்டம்ன்னு தெரியுது. அவங்க செலக்ட் பண்ண எந்தக் கஷ்டமும் படவில்லை.” “அவ்வளவு வாங்கறப்ப ரிப்பெடிஷன் இருந்தா பரவாயில்லே.” கஸ்டமரின் கஷ்டத்தைப் புரிந்து கொண்ட ஒரு சீனியர் ஊழியர் விடுவிடுவென்று வந்தார். அந்தக் கவுண்டரில் இருந்த பையனிடம், “என்னடா, கிளி ஜோஸ்யத்திலே கிளி சீட்டு எடுக்குற மாதிரி ஒண்ணொண்ணா காட்டிகிட்டு இருக்கே.. ” என்று ஒரு பத்துப் பனிரெண்டு புடவைகளை எடுத்து ரம்மி ஆட்டத்தில் டிக்ளேர் செய்வது போல போட்டார். தொடர்ந்து என

காமம்

என்னவளே என் இனியவளே அன்பே நீ எனக்காக எழுதப்பட்ட கடிதம் எப்போது வந்த சேரப்போகிராய் உனக்காக வெகு நாட்களை கட்டிக்கிறேன் உன்னை படித்து பார்க்க இப்படிக்கு உன்னவன் உன் இனியவன்