இடுகைகள்

ஜனவரி 17, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஈஸியான மருத்துவ குறிப்புகள்

படம்
பொதுவாக ஜலதோஷம், காய்ச்சல் போன்றவை நம்மை தாக்கினால் உடனே நாம் மருத்துவர்களை நாடுகிறோம். சில நேரங்களில் தலைசுற்றல் அல்லது வயிற்றுவலி போன்ற சில உடல் உபாதைகளுக்கு கூட மாத்திரை சாப்பிடுகிறோம். ஆனால் இது எல்லா நேரங்களிலும் ஆரோக்கியமானது என்ற உறுதியாக கூறமுடியாது. ஏனெனில் ரசாயன தன்மை மிகுந்த மாத்திரைகள் சில நேரங்களில் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும். எனவே வீட்டிலிருந்தபடியே சில மருத்துவ குறிப்புகளை நாம் தெரிந்து கொண்டு கையாள்வது நம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. எளிமையான சில மருத்துவ குறிப்புகள் * நெல்லி வற்றல்- சந்தனத்தூள்- கொத்தமல்லி மூன்றையும் தண்ணீரில் ஊற வைத்தபின் வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலை சுற்றல், கிறுகிறுப்பு முதலியன குறையும். * வெல்லத்தை கெட்டியாகப் பாகு வைத்து அதில் மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு உருட்டி வைத்தால் இருமல் வரும்போது வாயில் அடக்கிக் கொள்ள இருமல் நிற்கும். * மண் சட்டியில் உப்பை வறுத்துத் துணியில் கட்டி உப்பு ஒத்தடம் இரண்டு மூன்று வேளை கொடுத்தால் கழுத்து வலி நீங்கிவிடும். * நூல்கோலைத் துருவி ஊறவைத்து பயத்தம் பருப்பு கலந்து உப்பு பிசறி எலுமிச்சைச்ச

கூந்தல் பிரச்சனைக்கு தீர்வு தரும் கூலான மூலிகைகள்

படம்
கூந்தல் பிரச்சனைக்கு தீர்வு தரும் கூலான மூலிகைகள் முடி உதிர்தலை முக்கியமான பிரச்சனையாகப் பலரு ம் நினைக்கிறார்கள். ஒரு மனிதனுக்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் முடிக்கற்றைகள் உள்ளன. தினமும் ஒருவருக்கு 100 முடிகள்வரை உதிர்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், அதே அளவு வளர்வது இல்லை. குளிக் கும்போதோ, ஷாம்பு போடும்போ தோ, தலை வாரும்போதோ இதைப் பார்க்க முடியும். சிந்தாதுஷ்டி அதிகம் வந்தால் முடி உதிரும் என்பதைச் சரகர் கூறுகிறார். வழுக்கைத் தலையை alopecia என்பார்கள். ஆண்களுக்கு உருவாகும் ஒரு விதமான வழுக்கைக்கு androgenetic alopecia என்று பெயர். சில நேரம் புழுவெட்டு போல் ஏற்பட்டுக் கண் புருவம்கூட உதிர்ந்துவிடும். பூஞ்சைத் தொற்று கிருமிகளாலும், ஊட்டச்சத்து இல் லாததாலும், சுகாதாரம் இல்லாததாலும், ரேடியோ தெரபி, கீமோதெரபி எடுத்துக் கொள்ளும் போதும், இரு ம்புச் சத்து குறைவாக இருந்தாலும், தோல் அழியும் நோய் போன்றவற்றாலும் முடி உதிர்தல் காணப்படும். பொடுகு நோய் தாருணம் (seborrheic dermatitis) முடி உதிர்வதற்கு ஒரு காரணம். மனஅழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கும் முடி உதிரும். ஆயுர்வேதத்தில் அஸ்த