இடுகைகள்

ஆகஸ்ட் 31, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எனது காதலிக்காக...

உன்னுடன் என்ன பேச வேண்டும் என இரவு முழுவதும் யோசித்து வந்தேன்.. உன்னை கண்ட நொடியில் அத்தனையும் மறந்து ஒன்றும் அறியாதவனாய் நிற்கிறேன்.. **************************** உனக்காக நான் எழுதும் காதல் கடிதம் கூட என்னை பார்த்து சிரிக்கிறது.. இதையாவது அவளிடம் கொடுப்பாயா என்று.. **************************** எனக்கு வரும் ஒவ்வொரு அழைப்பும் நீயாக இருக்க கூடாதா என என்னை விட அதிகமாக ஏங்குகிறது என் தொலைபேசி.. உன் குரல் அதுக்கும் பிடித்திருக்கிறதாம்.. **************************** பூமியிலும் தேவதைகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. உன்னை கண்ட பின்தான் தெரிந்துகொண்டேன்.. **************************** என் இனியவளே.. தொலைபேசியில் நான் "ஹலோ" என்றதும் சிறிது நேரம் அமைதி காத்து பின் பேசுகிறாயே.. அதுக்கு என்ன அர்த்தமடி.. நீயும் காதலிக்க கற்றுக்கொண்டாயோ.. **************************** தேவதையே...உன்னை காண பேருந்து நிலையத்தில் நிற்கும் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு சொர்க்கம்தான்..

எது காதல் தெரியவில்லை....

படம்
என் தனிமையின் போதெல்லாம் - நாம் இதழ் வருடிய வார்த்தைகளையே அசை போடுகிறதே உள்ளம் இதுதான் காதலா... மற்றவர்கள் கேலியில் - நீ அகப்பட்டு கொண்டால் - என் மனம் வதைபடுகிறதே அதுதான் காதலா... அருகில் நீ இல்லாத போதும் உன்னுடன் உறவாடி உரையாடி மகிழ்கிறேனே இதுதான் காதலா... எனக்காக நீ தந்தவை தவிர்த்து சுவாச காற்று உள்பட - நீ வருடிய அனைத்தையும் சேகரிக்கிறேனே இதுதான் காதலா... யார் கேட்டும் இல்லை என்ற ஒன்றை - நீ கேட்க நினைக்கும்போதே கொடுக்க தோன்றுமே அதுதான் காதலா... பிரிவுகள் நேரும்போது ஏதோ ஓர் உணர்வு - நம் விழிகளுக்குள் நீர் நிரப்பி செல்கிறதே அதுதான் காதலா... ஊரே நம் உறவை காதலென்ற போது நீ மட்டும் மறுக்கிறாயே 'நாங்கள் நண்பர்களேன்று'... எது காதல் தெரியவில்லை இந்நிகழ்வுகள் அனைத்தும் நட்பிலும் சாத்தியம் என்பதால்...