இடுகைகள்

ஜனவரி 19, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கற்பூரவள்ளி - மருத்துவப் பயன்கள்

படம்
ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம். கற்பூரவள்ளி - மருத்துவப் பயன்கள் கற்பூரவள்ளி ( ஓம செடி ) பெரும்பாலும் விட்டிலேயே பூ தொட்டியில் வளர்க்கலாம் .இது மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி இப்போது உள் ள காலகட்டத்தில் நாம் இவ்வகையான மருத்துவ குணம் கொண்ட அறிய செடிகளை எல்லாம் மறந்து கொண்டு வருகிறோம் .நோயற்ற செல்வமே குறையற்ற செல்வம் என்று சொல்லுவார்கள் .அதை போல நாம் இவ்வகையான செடிகளை வளர்ப்பதன் மூலம் சில வகையான நோய்களை தடுக்கலாம் . கற்பூரவள்ளி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, புதராக வளருகிறது. வாசனை மிக்க இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. வேறுபெயர்கள் - ஓமவல்லி, ஒதப்பன்னா, பாசானபேதி, கண்டிரி போரேஜ். கற்பூரவல்லியை நம் வீட்டில் வளர்க்க 8 மாதங்கள் ஆகும். 8 மாதத்தில் இதன் இலைகள் பயன் தொடங்கும். இதன் தண்

இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!

படம்
இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!! (பூபதி லக்ஷமணன்) உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், சுறுசுறுப்பையயும் இஞ்சி கலந்த டீ-யின் மூலம் பெற முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? குளிர் மிகுந்த நேரத்தில் ஒரு கப் சூடான இஞ்சி டீயை விட சிறந்த பானம் எதுவாகவும் இருக்க முடியாது. அதிக அளவு வைட்டமின் சி, மெக்னீசியம், மற்றும் இதர கனிமங்களை கொண்ட இஞ்சி வேரை சாப்பிடுவது உடம்பிற்கு நன்மை விளைவிக்கும். மிகுந்த சுவையை கொடுக்கும் இந்த இஞ்சி டீ, உங்களுக்கு மிகவும் பிடித்த பானமாக மட்டுமல்லாமல் அது குளிர் காலத்தில் வரும் உடல் தொடர்பான பிரச்சனைகளுக்கு பெரும் தீர்வாகவும் உள்ளது. ஆகையால் இதை ஒரு மருந்துப் பொருளாகவும் இஞ்சியைக் கருதுகின்றனர். அதிலும் இஞ்சி டீ யை செய்ததும், அதனுடன் பெப்பர் மின்ட் (மிளகு கீரை), தேன் ஆகியவற்றை கலந்து டீயை அருந்தலாம். இதனால் இஞ்சியின் சுவை சற்றே மறைந்து காணப்படும். அதுமட்டுமில்லாமல் டீயின் சுவையும் மிகைப்படும். இப்போது நாம் ஏன் இஞ்சி டீயை அவசியம் குடிக்க வேண்டும் என்பதற்கான பதில் இதோ. குமட்டலை குறைக்கும் ஒரு கப் இஞ்சி டீயை குடிப்பதன் மூலம் குமட்டலை குறைக்க முடியும். வெளியே

இயற்கையான வயகரா – ஜாதிக்காய்..!!

படம்
இயற்கையான வயகரா – ஜாதிக்காய்..!! பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயகராவாக பயன்படுத்தப் பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம். உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் :- ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். விந்து முந்துதலை தவிர்க்க மூலிகைகள் பல உள்ளன, அதில் மிக எளிதாக மிகவும் பயனுள்ள மூலிகை ஜாதிக்காய். தாம்பத்தியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் உபயோகித்தாலே போதும். மேலும் சில குறிப்புகள் :- ஜாதிக்காயை அரைத்து தொப்புளைச் சுற்றி வீட்டில் உள்ள சில பாட்டிமார்கள் தடவிக்கொள்ள அறிவுறுத்துவார்கள். ஏன்

Computer or Pendriver'வில் வைரஸ்

படம்
உங்களுடைய Computer or Pendriver'வில் வைரஸ் அல்லது Files எல்லாம் மறந்து விட்டதா ? கவலை வேண்டாம். அஸ்ஸலாமு அலைக்கு & வணக்கம் இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு அதாவது Pen-driver தொடர்பான பதிவு இன்று எல்லோருக்கும் இருக்கும் பிரச்சினை சில சந்தர்பங்களில் உங்களுடைய Pen-Driver உள்ள Files எல்லாம் வைரஸ் தாக்கி அழிந்து போறது அல்லது உஞ்களுக்கு தெரியாமல் ஊந்க்கல்டுஐய Pen-Driver உள்ள சில Files எல்லாம் மறைந்து அதை எவ்வாறு நாம் மீள பெறுவது என்று இருந்தரு பாப்போம். முதலில் இந்த Application Download செய்து கொள்ளுங்கள் அதுக்கு பிறந்து இந்த Application ஓபன் செய்து கொள்ளுங்கள் நான் சும்மா என்னுடைய pendriver வைரஸ் Clean பண்ணி பாக்குறன் முதலில் Add என்று இருக்கும் இடத்தில நீங்கள் எடுக்க இருக்கும் Files select செய்து கொல்லுங்கள் உதாரண்மாக : நான் pendriver Select செய்துள்ளேன் அதன் பின்னர் உங்களுடைய Files எடுக்க விரும்பும் விதம் அதாவது வைரஸ் & மறந்துவிட்டதா ? அவ்வவுதான் இப்ப உங்களுடைய Pendriver ஒஎப்ன் செய்து பாருங்கள் எல்லாம் இருக்கும்

உடல் எடையை குறைக்க வேண்டுமா?

படம்
உடல் எடையை குறைக்க வேண்டுமா? பச்சை பயிறு சாப்பிடுங்க பருப்பு வகைகளை அடிக்கடி உண்ணும் போது ஏராளமான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன. குறிப்பாக பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல நன்மைகளை பெறலாம். பச்சை பயிறு உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு, சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளையும் சரி செய்கிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பச்சை பயறு உதவுகிறது. எனவே அன்றாடம் பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்து வாருங்கள். சத்துக்கள் நிறைந்தது பச்சை பயற்றில் இரும்புச்சத்து வளமாக உள்ளது. நீங்கள் இரும்புச்சத்து குறைபாட்டினால் அவஸ்தைப்பட்டால், அன்றாட உணவில் பச்சை பயறை சேர்த்து வாருங்கள். இதனால் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைத்து, இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பில் இருந்து தப்பிக்கலாம். சரும புற்றுநோய் பச்சை பயறு சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். அன்றாடம் வெளியில் அதிகம் சுற்றுவோர், உணவி

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா

படம்
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ் நாம் ஆரோக்கியமாக இருக்க ஹீமோகுளோபின் மிக முக்கிய பங்கை வகிப்பதால், இரத்தத்தில் அதனை இயல்பான அளவில் பராமரிக்க வேண்டியது அவசியமாகும். ஹீமோகுளோபின் என்பது நம் சிவப்பு இரத்த அணுக்களில் உள்ள இரும்புச்சத்து நிறைந்த புரதமாகும். நம் உடல் முழுவதும் ஆக்சிஜனை கொண்டு செல்லும் பொறுப்பு இந்த புரதத்துடையதாகும். இது வயது வந்த ஆண்களுக்கு 14 - 18 மி.கி./டெ.லி. மற்றும் வயது வந்த பெண்களுக்கு 12 - 16 மி.கி./டெ.லி இருக்க வேண்டும். பல நேரங்களில், சிவப்பு ரத்த அணுக்கள் குறைவாக இருப்பதால் ஹீமோகுளோபினும் குறைந்துவிடும். அதனால் ஹீமோகுளோபின் குறைவிற்கு பின்னணியில் உள்ள காரணத்தை பொறுத்து, அதனை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான இயற்கையான வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். போலிக் அமிலம் நிறைந்த உணவுகள் சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க தேவையாக இருப்பது பி-காம்ப்ளக்ஸ் வைட்டமினான ஃபோலிக் அமிலமாகும். அதனால் ஃபோலிக் அமில குறைபாடு இருந்தால், ஹீமோகுளோபின் அளவு தானாகவே குறைந்து விடும். அதனால் ஃபோலிக் அமிலம் வளமையாக உள்ள பச்சை இல்லை காய்கறிகள், ஈரல், அ

உப்பு தண்ணீரில் குளிப்பதால் கிடைக்கும் சூப்பரான நன்மைகள்

படம்
உப்பு தண்ணீரில் குளிப்பதால் கிடைக்கும் சூப்பரான நன்மைகள் உப்பு தண்ணீரில் தொடர்ச்சியாக குளித்து வரும் போது உடல் ரீதியான மற்றும் மனரீதியான நன்மைகள் கிடைக்கின்றன. சாதாரண தண்ணீரில் குளிக்கும் போது உடலில் உள்ள கிருமி தொற்று நீங்குவதற்கு சாத்தியம் இல்லாமல் போகலாம். ஆனால் உப்பு தண்ணீரில் குளிக்கும் போது உடலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் அதன் மூலம் உண்டாகும் தொற்றுகள் ஆகியவை பாதிப்பை ஏற்படுத்துவதை தவிர்க்கலாம். இளமையான தோற்றம் உப்பு தண்ணீர் குளியலை தொடர்ந்து செய்து வந்தால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் தொய்வுகள் குறையும். இது சருமத்தை மென்மையாக்கும். இது சருமத்தை கொழுக்க வைத்து சரும நீர்ச்சத்தை சமநிலைப்படுத்தும். பாத தசைகளுக்கு பயன் அளிக்கும் பாதங்களில் தசை தளர்ச்சி மற்றும் செருப்பால் கொப்புளங்கள் கூட ஏற்பட்டு, அதனால் நீங்கள் அவதிப்பட்டு வரலாம். உப்பு தண்ணீரில் குளித்தால், தசை வலியும் விறைப்பும் குறையும். மேலும் பாதத்தில் ஏற்படும் நாற்றத்தையும் போக்கும். சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும் உங்கள் சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருப்பது மிகவும் நல்லதாகும். உப்பு தண்ணீர

ஈஸியான மருத்துவ குறிப்புகள்: ட்ரை பண்ணி பாருங்க....

படம்
ஈஸியான மருத்துவ குறிப்புகள்: ட்ரை பண்ணி பாருங்க.... l பொதுவாக ஜலதோஷம், காய்ச்சல் போன்றவை நம்மை தாக்கினால் உடனே நாம் மருத்துவர்களை நாடுகிறோம். சில நேரங்களில் தலைசுற்றல் அல்லது வயிற்றுவலி போன்ற சில உடல் உபாதைகளுக்கு கூட மாத்திரை சாப்பிடுகிறோம். ஆனால் இது எல்லா நேரங்களிலும் ஆரோக்கியமானது என்ற உறுதியாக கூறமுடியாது. ஏனெனில் ரசாயன தன்மை மிகுந்த மாத்திரைகள் சில நேரங்களில் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும். எனவே வீட்டிலிருந்தபடியே சில மருத்துவ குறிப்புகளை நாம் தெரிந்து கொண்டு கையாள்வது நம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. எளிமையான சில மருத்துவ குறிப்புகள் * நெல்லி வற்றல்- சந்தனத்தூள்- கொத்தமல்லி மூன்றையும் தண்ணீரில் ஊற வைத்தபின் வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலை சுற்றல், கிறுகிறுப்பு முதலியன குறையும். * வெல்லத்தை கெட்டியாகப் பாகு வைத்து அதில் மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு உருட்டி வைத்தால் இருமல் வரும்போது வாயில் அடக்கிக் கொள்ள இருமல் நிற்கும். * மண் சட்டியில் உப்பை வறுத்துத் துணியில் கட்டி உப்பு ஒத்தடம் இரண்டு மூன்று வேளை கொடுத்தால் கழுத்து வலி நீங்கிவிடும். * நூல்கோலைத் த

ஈரல் நோய்களுக்கு பலன் தரும் முள்ளங்கி

படம்
ஈரல் நோய்களுக்கு பலன் தரும் முள்ளங்கி முள்ளங்கி நாம் சாதாரணமாக உணவாக பயன்படுத்துகிற ஒன்றுதான். எனினும் அதனுள் அடங்கியுள்ள மிகச்சிறந்த மருத்துவ குணங்களை நாம் அறியவில்லை. முள்ளங்கியில் மஞ்சள் முள்ளங்கி, சுவற்று முள்ளங்கி, சதுர முள்ளங்கி, வனமுள்ளங்கி, கெம்பு முள்ளங்கி என வேறு சில வகை முள்ளங்கிகளும் உண்டு. * முள்ளங்கி சாற்றோடு சர்க்கரை சேர்த்து உள்ளுக்கு கொடுப்பதால் குத்திருமல் குணமாகும். மேலும் பலவித ஈரல் நோய்களுக்கும் இது பலன் தரும். * முள்ளங்கியைப் பயிர் செய்து இரண்டு மூன்று இலைகள் வந்தவுடன் அந்த இலைகளில் ஒரு பிடி அளவு எடுத்து 2 முதல் 4 கிராம் அளவு சாதாரண சோற்று உப்பு சேர்த்து காலை, மாலை என 2 வேளையும் சாப்பிட்டு வர வெள்ளை வெட்டை என்கிற சிறுநீக மற்றும் பால்வினை நோய்களால் உண்டாகும் நீரடைப்பு நீங்கும். மலமும் வெளியேறும். * 50 முதல் 100 கிராம் வரையில் முள்ளங்கியை எடுத்து சாறு பிழிந்து குடித்து சிறுநீர் வர சிறுநீர் தாரளமாய் இறங்கும். * கிழங்கைப் பச்சையாகவோ, சமைத்தோ உண்பதால் சுவையின்மை நீங்கிப் பசி உண்டாகும். உணவையும் சீரணமாக்கும். * காலை, மாலை என இருவேளைகளும் முள்ளங்கி சாறு செய்து

பட்டுப் புடவையை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்

படம்
பட்டுப் புடவையை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ் பொதுவாக பட்டுப் புடவையை விரும்பாத பெண்களே கிடையாது என்று சொல்லலாம். அதிலும் தற்போது நம் நாட்டை விடவும் அயல்நாட்டு பெண்கள் பட்டுப் புடவை அணிவதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக தீபாவளி, பொங்கல் பண்டிகை போன்ற பண்டிகைகள் வந்துவிட்டால் ஜவுளிக்கடைகளில் இந்த பட்டுப் புடவையை தெரிவு செய்ய ஒரு பிரம்மாண்ட கூட்டமே இருக்கும். ஆனால் இதை பிற துணிகளை போல் துவைத்து மடிப்பது மட்டும் போதாது. இதை பாதுகாக்க சில வழிமுறைகளை நாம் கடைப்பிடிப்பது அவசியமாகும். சரியான பராமரிப்பு இல்லையேல் சில தினங்களிலேயே பட்டுப் புடவை பழைய புடவையாகிவிடும். பட்டுப் புடவையை பராமரிக்க சூப்பர் டிப்ஸ் பட்டுத் துணிகளை சோப்பைப் போட்டு நீண்ட நேரம் ஊற வைப்பதையும், அலசும் போது முறுக்கிப் பிழிவதையும் தவிர்க்க வேண்டும். அடித்துத் துவைப்பதும் கூடாது. துவைத்து உலர்த்தும் போது, வெயிலில் உலர்த்தாமல் நிழலில் காற்றில் படும்படி போடுவது நல்லது. பட்டுப் புடவையை இஸ்திரி செய்யும் போது அதன் மீது சுத்தமான வெள்ளைத் துணியைப் போட்டோ அல்லது புடவையைத் திருப்பி வைத்தோ, மிதமான சூட்டில் இஸ்திரி செ

உங்கள் குழந்தைகளின் தவறை புரிய வையுங்கள்

படம்
உங்கள் குழந்தைகளின் தவறை புரிய வையுங்கள் அடிக்கவோ திட்டவோ வேண்டாம் இன்றைய காலத்தில் குறும்பு செய்யாத குழந்தைகளை பார்க்கவே முடியாது. அவ்வாறு குறும்பு செய்யவில்லையென்றால் வீடே வெறிச்சோடி இருப்பது போல் இருக்கும். ஆனால் நிறைய பெற்றோர்கள் குழந்தைகளை அதிகம் எதையும் செய்யவிடாமல் தடுக்க முயற்சிக்கின்றனர். ஏனெனில் அவர்கள் எதாவது செய்ய போய், உடல் நலத்திற்கு ஏதேனும் நோய் வந்துவிடுமோ என்ற பயம் தான். அதற்காக சிறுவயதிலிருந்தே அவர்களை கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு, அவர்கள் ஏதேனும் குறும்போ அல்லது தவறு செய்து விட்டால், உடனே அவர்களை அடிப்பார்கள். ஏனெனில் அவர்கள் இன்னும் நமது முன்னோர்கள் சொன்ன பழமொழியான “ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது” என்பது தான். அதாவது குழந்தைகளை சிறு வயதிலேயே திருத்தாவிட்டால், அந்த பழக்கம் அவர்களிடமிருந்து மாறாமல் இருக்கும் என்பதற்காக, அவர்களை அடிக்கின்றனர். அவ்வாறு அடிக்கும் பெற்றோர்கள் கொஞ்சம் கூட குழந்தைகளது மனதை புரிந்து கொள்ளாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் குழந்தைகளை அடித்தால், அவர்கள் பிற்காலத்தில் எவ்வாறு கெட்டவர்களாக மாறுவார்கள் என்பது பற்றி புரியாமல் இருக்

குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட எளிய வழி..!

படம்
குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட எளிய வழி..! குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வறட்சி மற்றும் சுத்தமின்மை தான். பாதத்திற்கு அவ்வப்போது முறையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கொடுக்காவிடில் குதிகாலில் வெடிப்புகள் ஏற்பட ஆரம்பித்து, அது அழகை கெடுப்பதோடு, கடுமையான வேதனையையும் தரும். இந்த குதிகால் வெடிப்பைப் போக்க எத்தனை க்ரீம்கள் வந்தாலும், அவற்றால் முழுமையான தீர்வைப் பெற முடியாது. ஆனால், இயற்கை வழிகளைப் பின்பற்றினால் குதிகால் வெடிப்பைப் போக்குவதோடு, குதிகாலை அழகாகவும் பராமரிக்கலாம். ரோஸ்வாட்டர் மற்றும் கிளிசரின் : கிளிசரின் மற்றும் ரோஸ்வாட்டரை சரிசமமாக எடுத்துக் கொண்டு, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து, அந்த நீரில் 15-20 நிமிடம் பாதங்களை ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல் கொண்டு பாதங்களை தேய்த்து கழுவி, உலர வைத்து, இறுதியில் அந்த கிளிசரின் கலவையை பாதங்களில் தடவி வர வேண்டும். இப்படி, அன்றாடம் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், குதிகால் வெடி

குழந்தைகள் இல்லா தம்பதிகள் இரண்டே மாதங்களில் கருத்தரிக்க..!

படம்
குழந்தைகள் இல்லா தம்பதிகள் இரண்டே மாதங்களில் கருத்தரிக்க..! ஆண் பெண்களுக்கு மலட்டுத் தன்மை இருந்தாலும், ஆண்களுக்கு குழந்தையை உற்பத்தி செய்யக் கூடிய உயிர் அணுக்கள் குறைவு பட்டிருந்தாலும் இம்முறையை பயன்படுத்தினால் நிச்சயம் பலன் உண்டு. வாழை மரத்தின் அடித் தண்டை அறுத்து அதில் குழி செய்து, அதில் கொஞ்சம் நவச்சாரம் பொடி போட்டு அதை நன்றாகப் பாதுகாப்புடன் மூடி, காலையில் வாழைத் தண்டில் ஊறிய நீரை எடுத்து ஆண் பெண் இரு பாலரும் வெறும் வயிற்றில் தொடர்ந்து சுமார் 2 மாதங்கள் குடித்து வந்தால் நிச்சயமாக குழந்தைச் செல்வம் உண்டாகும். பக்க விளைவு இல்லாமல் சுலபமாக எளிய வகையில் கருவை கலைக்கும் வழிகள் சிலர் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் அடைந்து, ஒரு நல்ல நிலைக்கு வந்த பின்னர் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் இருப்பார்கள். இருப்பினும் ஆசையின் காரணமாக எதிர்பாராதவிதமாக சிலர் கருத்தரித்துவிடுகிறார்கள். அப்படி எதிர்பாராத நேரத்தில் கருத்தரிக்கும் போது, அக்கருவை சிலர் கலைக்க முற்படுவார்கள். அப்படி கருவை கலைக்க நினைக்கும் போது, எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாமல், எதிர்காலத்தில் கருத

கண்ணாடிப் பாடம்! 📚

படம்
கண்ணாடிப் பாடம்! 📚 அந்தப் பெரியவரின் கையில் ஒரு கண்ணாடி. அடிக்கடி அதைப் பார்ப்பார். பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார். பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் குறுகுறுப்பு…! ‘அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான்இருக்கிறது? பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே! ஒருவேளை மாயா ஜாலக் கண்ணாடியோ?’ அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை பெரியவரை நெருங்கினான். “ஐயா…!” “என்ன தம்பி?” “உங்கள் கையில் இருப்பது கண்ணாடிதானே?” “ஆமாம்!” “அதில் என்ன தெரிகிறது?” “நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ பார்த்தால் உன் முகம் தெரியும்!” “அப்படியானால் சாதாரணக் கண்ணாடிதானே அது?” “ஆமாம்!” “பிறகு ஏன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” பெரியவர் புன்னகைத்தார். “சாதாரணக் கண்ணாடிதான், ஆனால் அது தரும் பாடங்கள் நிறைய!” பாடமா… ??? கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்? அப்படிக் கேள். “உங்களில் ஒவ்வொருவரும் மற்றவர்க்குக் கண்ணாடி போன்றவர்கள்” எத்துணை ஆழமான உவமை இது!” “இந்த உவமையில் என்ன இருக்கிறது? எனக்கு ஒன்றும் புரியவில்லை! “ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச் சுட்டிக்காட்ட வேண்டும், எப்பட