இடுகைகள்

பிப்ரவரி 28, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அரபு சீமையிலே... - 16

படம்
அரபு சீமையிலே... - 16 Posted: 27 Feb 2010 10:22 AM PST துன்மார்க்கம் தோற்க சன்மார்க்கம் தழைத்தது! கண்ணான நபிதந்த பொன்மார்க்கம் அழைத்தது!! முஸ்லிம்கள் எண்ணிக்கை பெருத்தது கண்டு வருத்தமிகக் கொண்டனர் குறைஷிகள்! முஹம்மதை(ஸல்) திருத்தவேண்டும் என்று நாடினர்! உத்பாவின் கருத்தை யாவரும் வேண்டினர்!! ஆசை காட்டலாம் – என்ற யோசனை சொன்னார் அவர்! அதன்படி, ஓசையின்றி மெல்ல சென்றார்- இறை தாசனவர் சந்நிதிக்கு!! "உயர்குடி பிறப்பே! – நமது பெயர்கெட நீரும், புதுமார்க்கம் தரவே – யாம் துயர்மிகக் கொள்கிறோம் - இதை அயர்வுடன் சொல்கிறோம்!! பொருள் வேண்டுமா? – சீமான் என்னும் பெயர் வேண்டுமா??? அருளோடு பதவி வேண்டுமா? இல்லை வேறேதேனும் உதவி வேண்டுமா??? அழகழகாய் பெண் வேண்டுமா? இல்லை மலையளவு பொன் வேண்டுமா??? உமக்கு மூளை பிசகலா? – அல்லது, பூத கணங்களின் சதியா?? வீண்பூசல் வேண்டாம்! உம்மாசை சொல்வீர் – அதை நிறைவேற்றச் செய்வோம்!!! கண்மணியாம் நபியும் புன்முறுவல் பூத்தார்! தண்மறையின் போதனையை தானோதச் செய்தார்!! தன்வழியில் அவர்சேர அன்பாக அழைத்தார்!!! இன்னதென புரியாமல் உத்பாவும் வி