இடுகைகள்

ஜனவரி 25, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் குடும்பத்துக்கு நன்றி!

படம்
தமிழ் குடும்பத்துக்கு நன்றி! Posted: 24 Jan 2010 03:16 AM PST எதிர்பாராத சில விஷயங்கள் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விடுகிறது. தமிழ் குடும்பத்தின் அன்பளிப்பும் அது போலத் தான். திறமையுள்ள யாவரையும் ஊக்கப்படுத்தி, அவர்களின் படைப்புகளை வெளியிட்டு வரும் தமிழ்குடும்பம்.காம் இணைய தளம், கடந்த பத்து நாட்களுக்கு முன்பு, அத்தளத்தில் நல்ல முறையில் பங்கெடுத்து தம் ஆக்கங்களைப் பதிந்த ஒரு சிலரைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கியது. அதில், சாயபு வீட்டு சரித்திரம் என்னும் உண்மை சம்பவத் தொடரை 30 பாகங்களாக எழுதி நிறைவு செய்திருந்த என்னையும் பரிசு வழங்கத் தேர்ந்தெடுத்து இருந்தார்கள். அதற்கு முதலாவதாக தமிழ்குடும்பத்துக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பரிசாக வழங்க, ருபாய் 500 மதிப்புள்ள புத்தகங்களைத் உடுமலை.காம் என்னும் புத்தக விற்பனைத் தளத்தில் தேர்ந்தெடுத்து அனுப்புமாறு மின்னஞ்சல் அனுப்பு இருந்தார்கள். அத்தளத்தில் கிட்டத்தட்ட, அனைத்து எழுத்தாளர்களின் ஆக்கங்களும் இருந்தன. எதைத் தேர்ந்தெடுப்பது என்று சற்றே குழம்பினாலும், நான் முதலில் தேடியது, பழம்பெரும் பெண் எழுத்தாளர் லட்சுமி எழுதிய பெண்