இடுகைகள்

பிப்ரவரி 21, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கண்ணில் தெரியும் கனவு

படம்
கண்ணில் தெரியும் கனவு Posted: 20 Feb 2010 10:40 AM PST வானவில்லே, இன்ப வானவில்லே! ....வரும் காலம் தோறும் கானம் நூறு, ....பாடும் ராகம் போடும் தாளம் ....கேட்கும் இந்த மண்ணிலே! ....அந்த சரணம் அங்கு விண்ணிலே!! நானுமங்கே, இன்று நானுமங்கே! ....கோலம் பாதி கோணம் மாறி, ....கூட்டை விட்டு வானில் தாவி, ....விண்ணில் வரைந்த கோலமே! ....என் எண்ணம் அதனுள் வாழுமே!! வான எல்லை, அங்கு வரைந்த வில்லே! ....கூத்தடிக்க கூட சேர்ந்து ....பாட்டிசைக்க பருவம் பார்த்து, ....நெஞ்சை அள்ளும் தோற்றமே! ....என் எண்ணம் அதனுள் வாழுமே!! கன்னித் தாமரை, கண்ணுக்கேன் திரை ....கூறும் உருவம் மாறும் பருவம் ....நீரில் அமுதம் தேடும் குமுதம் ....எண்ணம் மிதக்கும் கனவிலே! ....அது நீந்திச் செல்லும் நிலவிலே!! -சுமஜ்லா. ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி!