இடுகைகள்

அக்டோபர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆண்களைப் பற்றிய உண்மைகள்!!

படம்
ஆண்களைப் பற்றிய உண்மைகள்!! எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்... இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.... ... ஆண் என்பவன் யார்? ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான். அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் தாய் தந்தை, சகோதரிக்காக குடும்ப சூழ்நிலையால்,..... பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு வெளிநாடுகளில் வேலை செய்வதன் மூலம் அன்பு மற்றும் சந்தோசத்தை தியாகம் செய்கிறான். அவன் மகள் மற்றும் சகோதரிக்காக தன் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் கடனாளியாய் உருவாகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான். அவன் தன் மனைவியின் ஆசைகள் மற்றும் குழந்தைகக்காக படிப்பு, திருமணம் என எந்தவித குறையும் இல்லாமல் வைக்க தன்னையே தியாகம் செய்கிறான். அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும்

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :-

படம்
மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :- 01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். 02. மனது புண்படும்படி பேசக் கூடாது. 03. கோபப்படக்கூடாது. ... 04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது 05. பலர் முன் திட்டக்கூடாது. 06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது. 07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். 08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். 09. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும் 10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும். 11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும். 12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும். 13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும். 14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். 15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும். 16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும். 17. ஒளிவு மறைவு கூடாது. 18. மனைவியை நம்ப வேண்டும். 19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும். 20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பார

'வாட்ஸ் அப்' விபரீதம்!

'வாட்ஸ் அப்' விபரீதம்! ************************************* மனிதகுலம் முன்னேறுவதற்கும், பல்வேறு தகவல்கள் உலகத்தில் உள்ள அனைவருக்கும் விரைவில் போய்ச் சேரவும்தான் சமூக வலைத்தளங்கள் தோன்றின. கூகுள், ஆர்குட், ஃபேஸ்புக், ட்விட்டர் வரிசையில் தற்போது, மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் வாட்ஸ் அப் முக்கியப் பங்கு வகிக்கிறது. மற்ற சமூக வலைத்தளங்களைக் காட்டிலும் அதிகளவில் நண்பர்களை இணைப்பதில் “வாட்ஸ் அப்“ முன்னணியில் இருக்கிறது. வாட்ஸ் அப்பின் திடீர் அசுர வளர்ச்சியைக் கண்டு அசந்துபோன ஃபேஸ்புக் வாட்ஸ் அப்பை விலைக்கு வாங்கியது தெரிந்த தகவல். ஆனால், பல்வேறு வசதிகளைப் பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்தாலும், வழக்கம் போலப் பெண்களை அச்சுறுத்தும் காரியங்கள் வாட்ஸ் அப் வழியாகத் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ‘முகம் தெரிந்த நண்பர்களை மட்டுமே இணைக்கும் தளம்’ என வாட்ஸ் அப் கருதப்பட்டதால்தான் பெண்கள் வட்டத்திலும் வாட்ஸ் அப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் வாட்ஸ் அப்பிலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது சமீபகாலமாக நிரூபணம் ஆகிவருகின்றன. மற்ற வலைத்தளங்களைக் க

வயிற்றில் வளர்வது ஆணா? பெண்ணா?

வயிற்றில் வளர்வது ஆணா? பெண்ணா? கண்டுபிடிக்க எளிய வழிமுறை. ***************************************************************** உலகம் முழுவதும் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கும் அவரது கணவர் உறவினர்களுக்கும் பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று தெரிந்து கொள்ள ஆசை அதிகம் இருக்கும். ... ஆனால் நம் நாட்டில் அதைத் தெரிந்து கொள்ள முடியாது. இப்படி தெரிந்து கொள்வதை நம் இந்திய சட்டம் தடை செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அக்காலத்தில் பெண் குழந்தை என்றால் கள்ளிப் பால் கொடுத்து கொன்று வந்தது தான். இன்றும் சில கிராமப்புறங்களில் இந்த கொடிய செயலை தொடர்ந்து செய்து வருகின்றனர். அதனால், ஸ்கேன் கண்டுபிடிப்பதற்கு முன் நம் முன்னோர்கள் ஒருசில அறிகுறிகளைக் கொண்டு வயிற்றில் வளரும் குழந்தை என்னவென்று கண்டுப்பிடித்து வந்தனர். மேலும் அந்த அறிகுறிகளின் படி பலருக்கு சரியான குழந்தைப் பிறந்துள்ளது. இதற்கு எவ்வித சரியான நிரூபணம் இல்லாவிட்டாலும், அந்த அறிகுறிகளைக் கொண்டு தெரிந்து கொண்டு சந்தோஷப்படலாம் . ஸ்கேன் செய்து வயிற்றில் வளரும் குழந்தையைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாதே தவிர, வயிற்றில் வளர்வது ஆணா? பெண்ண

திருமணமான புதியதில் பெண்கள்

திருமணமான புதியதில் பெண்கள் 1. கணவர் கூப்பிடாத போதே…என்ன கூப்பிட்டீங்களா? இதோ வரேன். 2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம் 3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன். ... 4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும். 5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க. 6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு. 7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு. 8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க. 9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா. சிறிது ஆண்டுகள் கழித்து 1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்துல வந்து சொல்லிட்டு போனா என்ன? 2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா?? 3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்னும் பண்ணல. ஊறுகாய் போதும்ல? 4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ. 5. ம்ம்ம். உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர். 6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு. 7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே! 8. உங்க வீ

இளநீர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்:

இளநீர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்: உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் .நல்லது கெட்டது எல்லாமும்தான்! உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து, உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. ... இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும்இரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது. www.puradsifm.com மூல நோயாளிகள், நாட்பட்டசீதபேதி, ,ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கின்றது. பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டாக்டரிடம் செல்வதற்குமுன் 2 டம்ளர் இளநீர் சாப்பிடுவது என்பது1 பாட்டில் சலைன் வாட்டர் ஏற்றுவதற்குச் சமமாகும். நீர்க்கடுப்பு மே, ஜூன் ஆகியஇரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் சிறுநீரகம்வற்றித் தடித்துச் சிவந்து சொட்டு சொட்டாகப் போகும். அப்போது 2 டம்ளர் இளநீர் பருகிட 1 மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும். சிறுநீர்த் தாரையில் சில நேரம் புண்ணாக இருந்தால் PUS CELLS அதிகமாகி எரிச்சல், கடுப்பு உ

அருகம்புல்லின் மருத்துவ குணங்கள்

படம்
அருகம்புல்லின் மருத்துவ குணங்கள் எளிதில் அனைவருக்கும் கிடைக்கும் அருகம்புல், இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்குள்ளது. முழுமுதற்கடவுளான விநாயகருக்கு உகந்த வழிபாட்டுப் பொருளாக அருகம்புல் கருதப்படுகிறது. ஆனால், இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. அருகம்புல்லில் சாறு எடுத்து உட்கொண்டால் உடல் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம். தயாரிப்பது எப்படி? கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைபடுத்த வேண்டும். பின்னர் அருகம்புல்லுடன் கொஞ்சம் தண்ணீரைச் சேர்த்து, (தேவைப்பட்டால்) துளசி, வில்வம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுக்க வேண்டும். வீட்டில் மிக்ஸி இருப்பின், அதைப் பயன்படுத்தியும் சாறு தயாரிக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவில் இதை பருகலாம். மருத்துவ குணங்கள்: * அருகம்புல் சாற்றில் வைட்டமின் 'ஏ' சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகள

வெற்றிலையின் மருத்துவப் பயன்கள்

படம்
வெற்றிலையின் மருத்துவப் பயன்கள் வெற்றிலைச்சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடன் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு  பிரியும். வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும். குழந்தைகளுக்கு வரும் ஜுரம், ஜன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில், கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன்  கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும். வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை  கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும். குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால்  வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தேய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும். வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும். கம்ம

CAPTCHA Text என்றால் என்ன

படம்
CAPTCHA Text என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? இணைய தளங்களில், படிவம் ஏதேனும் ஒன்றை நிரப்பி முடித்த பின்னர், கப்சா ரெக்ஸ்ட் (CAPTCHA Text) ஒன்றை மேற்கொள்ளும்படி கேட்கும். இதில் சாய்வான எழுத்துக்கள், எண்கள் தரப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில், இது சரியாகத் தெரிவதே இல்லை. இதனை ஏன் CAPTCHA Text என்று சொல்கிறார்கள். இதன் விரிவாக்கம் என்ன? . இணையம் பயன்படுத்துவோரில் பெரும்பாலானவர்களுக்கு இந்த கேள்வி ஒரு சந்தேகமாக இருந்திருக்கும். நீங்கள் கேட்டுவிட்டீர்கள். இதோ அது பற்றிய ப ... தில் குறிப்பு. CAPTCHA என்பதன் விரிவாக்கம் Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart ஆகும். இணையத் தொடர்பில், பின்னூட்டங்களைப் பெறுகையில், கம்ப்யூட்டருக்கும் மனிதனுக்கும் இடையே வேறுபாட்டினைக் காண இந்த சோதனை நடத்தப்படுகிறது. . ஏனென்றால், ஆன்லைனில், கம்ப்யூட்டரே சில கேள்விகளுக்குப் பதில் அளித்து, பாஸ்வேர்ட், யூசர் நேம் போன்றவற்றை வழங்கும் வகையில் புரோகிராம் அமைக்க முடியும் என்பதால், மனிதர்கள் மட்டுமே பதில்களைத் தரும் வகையில் இந்த சோதனை தரப்படுகிறது. எழுத்துக்கள் மற்றும் எண

நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைல்

படம்
நீங்கள் கையெழுத்துப் போடும்ஸ்டைலில்உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிடமுடியும் தெரியுமா ? 1) கையெழுத்துப் போட்டு விட்டுக்கீழே சின்னக் கோடு போட்டால்... தைரிய பார்ட்டிகள் . நல்லவர்தான்ஆனால்,கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள். இந்தஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள்.. , சச்சின், சாப்ளின்,வின்ஃப்ரே.. ... 2) கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள் வைத்தால்... ரொமான்டிக் பார்ட்டி .உடை மாற்றுவதுபோலக் காதலன் /காதலியை மாற்றுவீர்கள் .மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட்செய்வீர்கள் .அமிதாப் இந்த ஸ்டைலின் வி.ஐ.பி.. 3) கையெழுத்துக்குக்கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால்... கூல் பார்ட்டி . சிம்பிளாக இருப்பீர்கள் .பிடிக்காதவர்களைத் திரும்பிக்கூடப்பார்க்க மாட்டீர்கள். இந்த ஸ்டைலின் வி.ஐ.பி.டாக்டர் விக்ரம் சாராபாய்.. 4) உங்கள் கையெழுத்தின் கீழ்புள்ளியோ,கோடோ கிடையாதா ? உங்கள் வாழ்க்கை உங்கள்கையில்தான் .அடுத்தவர்கள் கருத்து சொன்னால் கண்டுகொள்ளவே மாட்டீர்கள் . இதில் பாரக்ஒபாமா இருப்பார் .. 5) பெயருக்கு சம்பந்தமே இல்லாமல் கையெழுத்துப் போட்டால்... கமுக்க பார்ட்டி . உங்களிடம் நம்பி ரகசியம்சொல்லலாம் . கொஞ்சம் புத

ஆபாச பட தகவல் Google search வராமல் Lock செய்வது எப்படி..!!?

படம்
ஆபாச பட தகவல் Google search வராமல் Lock செய்வது எப்படி..!!? அன்பு சகோதர, சகோதரிகளே!... நமது எல்லோருடைய வீட்டிலும் computer அல்லது Laptop System இருக்கிறது. இதனை மனைவி, மக்கள் என அனைவரும் தினசரி உபயோகப் படுத்துகிறோம்... ... பல தகவல்கள் Google search ல் நாம் தேடும் போது யதார்த்தமாகவோ, Spelling mistake ஏற்படும் போது ஆபாச தகவல்கள், படங்கள் என வந்து மிகவும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடுகிறது என்பது உண்மையே?... ஆபாச தகவல் Google search ல் வராமல் Lock செய்வது எப்படி..? முதலில் Google தளம் சென்று User name, password கொடுத்து Login செய்யுங்கள்... பிறகு Setting click செய்யுங்கள்... அல்லது http://www.Google.com/preferences ஐ open செய்து... Safe search filtering சென்று உங்களுக்கு தேவையான நிறுவனங்கள் Select செய்து கொண்டு முடிந்த பின்பு, Back ல் மீண்டும் வந்து... Safe search filtering கீழே உள்ள Lock safe search ஐ click செய்யுங்கள்... Locking process நடைபெறும்... பிறகு Safe search locked என தோன்றும்... சரியாக Lock ஆகிவிட்டதா? மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்..!!! அவ்வளவு

தலைவலிக்கு கைவைத்தியம்

தலைவலிக்கு கைவைத்தியம் ******************************************** காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், ஒரு துண்டு ஆப்பிளில் சிறிது உப்பு தடவி சாப்பிட வேண்டும். ஆப்பிளை சாப்பிட்டதும், சிறிது வெதுவெதுப்பான தண்ணீரோ, சூடான பாலோ அருந்த வேண்டும். இப்படி ஒரு பத்து நாட்களுக்கு செய்து வந்தால், நாள்பட்ட தலைவலி குறையும். தலைவலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும் பொருட்களில் பாதாம் எண்ணெயும் ஒன்று. எனவே நெற்றியில் சிறிதளவு பாதாம் எண்ணெய் தடவி, 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி ... நீங்கும். தலைவலி உடனடியாக நீங்க வேண்டுமா அப்படியென்றால், சிறிது இஞ்சி, சீரகம், மல்லி ஆகியவற்றை சிறிது தண்ணீரில் போட்டு, 5 நிமி டங்கள் கொதிக்க வைத்து, ஒரு தேநீர் போன்று தயாரித்து வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும். வெற்றிலைக்கு வலி நிவாரணித் தன்மை உள்ளது. இது தலைவலிக்கும் நல்ல நிவாரணத்தை அளிக்கும். அதற்கு சில வெற்றிலைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை நன்றாக அரைத்து எடுத்துக் கொண்டு, நெற்றியில் பற்றுப் போல தடவிக் கொள்ளவும். இதனால் தலைவலி மாயம

வியக்க வைக்கும் வேர்க்கடலை !

படம்
உணவே மருந்து :- வியக்க வைக்கும் வேர்க்கடலை ! நிலக்கடலை குறித்த மூடநம்பிக்கைகள், அவ நம்பிக்கைகள் இந்தியா முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டுப் பரப்பிவிடப்பட்டுள்ளன. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய் பிடிக்கும் பருவத்திற்குப் பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதைக் காணலாம். நிலக்கடலைச் செடியைச் சாப்பிடும் ஆடு, மாடு, நாய் வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராகச் செயல்படுவதுடன் கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப்பேறும் உடன் உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். நீரழிவு நோயைத் தடுக்கும் : நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ், மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கியப் பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உண

பேஸ்புக்கில் உங்கள் நன்பர்களை மற்றவர்கள் பார்க்கமால் மறைப்பது எப்படி??

படம்
பேஸ்புக்கில் உங்கள் நன்பர்களை மற்றவர்கள் பார்க்கமால் மறைப்பது எப்படி?? பேஸ்புக்கில் உங்களுக்கு இருக்கும் நன்பர்கள் பட்டியலை நோட்டம் விட்டு, உங்கள் பெண் நன்பர்களுக்கு நட்பு அழைப்போ, தொந்தரவோ தர சில நபர்கள் இருக்கிறார்கள்,உங்கள் நேசமானவர்களை இந்த நாசமா போனவர்களிடமிருந்து காக்க நீங்கள் உங்கள் Friend list ஐ உங்களுக்கு மட்டும் தெரியும் வகையில் மறைத்து வைக்க வேண்டும். படி 1 : உங்கள் டைம்லைனிற்குள் சென்று கொள்ளுங்கள் (டைம்லைனிற்கு செல்ல உங்கள் பெயரினை க்ளிக் செய்க படி2 : Friends என்பதை க்ளிக் செய்க ( நீங்கள் இப்போது உங்கள் நன்பர்கள் பட்டியலுக்கு இழுத்து செல்லப்படுவீர்கள்) படி 3 : இங்கு வலது புறம் (Right side) Find friends ஆப்சன் அருகே உள்ள பென்சில் பட்த்தை க்ளிக் செய்க படி 4 :இரண்டு ஆப்சன் கள் கொடுக்கப்படும் அதில் edit privacy என்பதை க்ளிக் செய்யவும் படி 5: ஒரு பெட்டி ஓபன் ஆகும். இங்கு நீங்கள் உங்கள் நன்பர்கள், நீங்கள் Follow செய்யும் நபர்கள், உங்களை Follow செய்யும் நபர்கள் போன்ற முத்தரப்பு நபர்களை உங்கள் தேவைக்கேற்ப மறைத்து வைக்கும் ஆப்சன் கள் உள்ளன , அதில் Only me செலக்ட

உங்கள் லேப்டாப் மற்றும் கணனியின் பாஸ்வேர்ட் மறந்துடுச்சா கவலையே படாமல் இதனைப்படியுங்கள்...

படம்
ஞாபக மறதி என்பது மனிதர்கள் அனைவருக்கும் இருக்கும். சில சமயங்களில் ஞாபக மறதி பாடாய் படுத்தும். 'நேத்துதான் புதுசா பாஸ்வேர்ட் மாத்தினேன்.. அதுக்குள்ள மறந்துடுச்சு' என்று புலம்புபவர்களும் உண்டு. அல்லது எப்பொழுதோ பயன்படுத்திய பழைய பாஸ்வேர்ட்அடிக்கடி மனசுக்குள், நினைவிற்கு வரும். ஆனால் என்ன செய்தாலும் புதிதாக மாற்றின பாஸ்வேர்ட் மட்டும் ஞாபகத்துக்கு வரவே வராது.. இப்படி நீங்கள் எப்பொழுதாவது கணினியின் கடவுச்சொல்லை மறந்துவிட்டு புலம்பியிருக்கிறீர்களா? அப்படின்னா கண்டிப்பா இந்த கட்டுரையை படிங்க.... "நான் மறக்கவே மாட்டேன்ப்பா.. எனக்கு பிரைன் மெமரி பவர் (Brain Memory Power)அதிகம்" என்று சொல்பவர்களுக்கு கூட கண்டிப்பாக இது பயன்படும். நீங்களும் படித்துப் பாருங்கள்.. உங்களோட நண்பர்களுக்கும் சொல்லுங்க. உங்களோட கம்ப்யூட்டர் பாஸ்வேர்ட் உங்களுக்கு அடிக்கடி மறந்து போய்விட்டால் என்ன செய்வது? அதற்கான தீர்வை இப்பொழுது பார்ப்போம். நிச்சயம் உங்களிடம் USB Pendrive இருக்கும். இதன் மூலம் உங்கள் பாஸ்வேர்டை உள்ளிட்டு கணினியை இயங்கச் செய்வது தற்போதைய புதிய தொழில்நுட்பமாக உள்ளது. அதாவது நீங்கள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்!

படம்
பூண்டு : பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும், காதல் உணர்வைத் தூண்டவும் செய்யும் அருமையான குணங்களைக் கொண்டுள்ளது. எதிர்ப்பு சக்தியைப் பொறுத்த விஷயத்தில் பூண்டின் பங்கு மிகவும் அருமையானது. இதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் பாக்டீரியாக்களையும், தொற்றுக்களையும் கொல்லவல்லது. இஞ்சி : நுண்ணுயிர்களுக்கு எதிராகப் போராடும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இதில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் எனப்படும் உடலை காக்கும் பொருள் நிறைந்துள்ளது. தயிர் : தயிரில் உடலுக்கு நல்லது செய்யும் நுண்ணுயிர்கள் நிறைந்துள்ளன. இந்த நல்ல நுண்ணுயிர்கள் செரிமான உறுப்புகளை குறிப்பாக குடற்பகுதியை நல்ல நிலையில் வைக்க உதவுகின்றன. ஆரோக்கியமன செரிமான மண்டலம் ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உறுதி செய்யும். பார்லி, ஓட்ஸ் : பார்லியும் ஓட்ஸும் ஒரு முக்கியமான நார்ச்சத்தான பீட்டா&க்ளூக்கன் எனப்படும் நுண்ணுயிர் கொல்லும் மற்றும் உடலைக் காக்கும் குணங்களைக் கொண்ட பொருளைக் கொண்டுள்ளன. இவை மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். டீ, காபி : டீ மற்றும் காபி ஆகிய இரண்டுமே மூளையை சுறுசுறுப்படையச் செய்யு

வைட்டமின் மாத்திரைகள் அறிந்ததும் அறியாததும்!

படம்
''எப்பவும் டயர்டா இருக்கு. சுறுசுறுப்பா எந்த வேலையும் செய்ய முடியலை, முடி கொட்டுது. சத்துக்குறைவா இருக்கும்னு தோணுது. ஏதாவது சத்து மாத்திரை எழுதித் தாங்க டாக்டர்' இப்படிக் கேட்பது சர்வ சாதாரணமாகிவிட்டது .   ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொண்டதுபோய், காலையில் இரண்டு, மதியம் ஒன்று, இரவுக்கு மூன்று என மாத்திரைகள் மூலமே ஆரோக்கியமாக வாழ்ந்துவிடலாம் என நம்பத் தொடங்கிவிட்டோம். ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்டு டாக்டரின் ஆலோசனைப்படி மாத்திரை எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை. ஆனால், சுயமாக ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிடுவதால் பாதிப்புகள்தான் அதிகம். யாரெல்லாம் வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம், எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளலாம், வைட்டமின் மாத்திரைகளிலும் பக்கவிளைவுகள் உண்டா என்கிற நம் சந்தேகங்களை, டாக்டர் சாய்கிஷோர் முன் வைத்தோம். "கண் சற்று மங்கலாக இருந்தால் அதை உணவு மூலம் எப்படி சரி செய்யலாம் என யோசிப்பதை விட்டு விட்டு, ஏதாவது மாத்திரை தருமாறுதான் கேட்கின்றனர். பொதுவாக வைட்டமின்களை, நீரில் கரைபவை, கொழுப்பில் கரைபவை என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். இதில், பெர

சர்க்கரை நோயாளிகளுக்கு எமனாகும் பொன்னி அரிசி

படம்
சர்க்கரை நோயாளிகளுக்கு எமனாகும் பொன்னி அரிசி தற்போது நம்மவர்களை பயமுறுத்தும் முதல் கொடிய நோய் சர்க்கரை நோய் தான். சர்க்கரை நோய் வந்துவிட்டால் எண்ணை பண்டங்கள், இனிப்புகள் சாப்பிட முடியாது என்ற கவலை ஒரு புறமிருந்தால், இந்த நோய் மேலும் சில நோய்களுக்கு வாயிற் கதவாக இருப்பது மேலும் நம்மை அச்சத்தில்  ஆழ்த்தி உள்ளது. டாக்டரிடம் சென்றால், தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். டென்சன் ஆகாதீர்கள். இப்படி பல அறிவுரை  கூறுவார். ஆனால் கவனமாக இருப்பது நம் கையில் தான் உள்ளது. நம் நாட்டில் சர்க்கரை நோயாளிகள் அதிகமாக இருப்பதற்கான காரணங்கள் ஏராளம் உள்ளது. நம்மவர்களின் மரபணுக்கள்தான் காரணம் என்று ஒரு  புறமும். நம்நாட்டின் தட்பவெப்ப சுற்றுச்சூழல்தான் பிரச்னையே என்று மறுபுறமும், உடல் உழைப்பு மிகவும் குறைந்துவிட்டதை மறந்துவிடக் கூடாது  என்று கூடி பேசுவோர் மற்றொரு பக்கமும் நின்று பட்டிமன்ற பாணியில் விவாதித்து வருகின்றனர்.சர்க்கரை நோயை பற்றி சமீபத்திய ஆய்வு ஒரு  தகவல் கூறியுள்ளது. அதை பார்ப்போம்... ஒவ்வொரு உணவும் வயிற்றுக்குள் போய் ஜீரணமாகி, எவ்வளவு சீக்கிரம் ரத்தத்தில் சர்க்