இடுகைகள்

செப்டம்பர் 28, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பொன்னாங்கண்ணியின் மருத்துவ குணங்கள்!

படம்
கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணி கீரையில், எண்ணற்ற மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது. சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரைதான் பொன்னாங்கண்ணி. இதில் பொன்னாங்கண்ணி கீரையில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளது. இ‌ந்த‌க் ‌கீரையை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நிலவைப் பார்க்கலாம் என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு கண்பார்வைக்கு மிக துல்லியமாக தெரிய உதவும்.    பயன்கள்! 1. பொ‌ன்னா‌ங்க‌ண்‌ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால்உடல்  எடை குறையும்.   2. துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும். 

மார்பக புற்றுநோய்

மார்பகப் புற்றுநோய் இந்தியாவில் பெண்களிடம் கருப்பைப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக அதிகமாக காணப்படும் ஒன்றாகும். 2001 ஆம் ஆண்டு இந்தியாவில் மொத்த பெண்களின் எண்ணிக்கையில் 503 மில்லியனில் 80 ஆயிரம் பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ஒரு லட்சம் பெண்களில் 21 பேருக்கு இப்புற்றுநோய் பாதிக்கும் என்று அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் : 1. மார்பகத்தில் கட்டி அல்லது அக்குளில் நெரிக்கட்டு ஏற்படுதல். 2. மார்பக அமைப்பில் ஏற்படும் மாற்றம். 3. மார்பக காம்புகளிலிருந்து இரத்தத்துடன் கலந்து கசிவு. 4. மார்பக காம்புகள் உள்ளிழுத்துக் கொள்ளுதல ், மார்பகத் தோலில் ஏற்படும் சுருக்கம். மேற்கூறிய அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனே தாமதிக்காமல் மருத்துவரை அணுகி அவருடைய ஆலோசனையின் பேரில் மார்பகத்தில் உள்ள கட்டி புற்றுநோய் கட்டியா அல்லது சாதாரண கட்டியா என்பதை அறிந்து தக்க சிகிச்சையை பெறலாம். மார்பக புற்றுநோய் ஏற்பட காரணங்கள ் 1. சிறுவயதிலேயே பருவமடைதல் அல்லது மாதவிடாய் நிற்பதில் ஏற்படு

அத்திப்பழம்

படம்
புகைப்பழக்கத்தை இன்றுடன் விட்டுவிடலாம், சரி நாளை, நாளை மறு நாள் என்று பேசிக்கொண்டிருக்கும்போதே ஈரல், நுரையீரல் பாதிப்படைந்துவிடுகிறது. நாளடைவில் அவை பழுதடைந்து உடல் நலத்தை முழுவதுமாக பாதிக்கிறது. சரி புகைப்பழக்கத்தால் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டவர்கள் அத்திப்பழத்தை உண்பது சிறந்தது. FILE போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை வினிகரில் ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம். தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். இதால் ரத்தம் சுத்திகரிக்கப்படும். மலச்சிக்கல் மற்றும் சூட்டை தனிக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம், அத்தியில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. ஆகையால் இதனை பொதுவாக தினசரி உணவாக எடுத்துக்கொள்ளலாம். சரும பிரச்சனைக்கு அத்திப்பழத்தை பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம். அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள