இடுகைகள்

செப்டம்பர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் அரபு சீமையிலே... - 19 Posted: 12 Sep 2010 09:46 PM PDT நிகழ்ந்த மாற்றமேதும் அறியாமல், தோழர்கள் வாளேந்தி உமர் வருவதைக் கேள்வியுற்றனர்! கிலேசமுற்றனர்! சவாலிட்ட வாலிபரை எண்ணி கலக்கமுற்றனர்!! தட்டப்பட்ட கதவின் கிட்டேவந்தனர் தோழர்கள்; நோக்கம் அறிந்தபின் தாக்குவோம்; ஆக்கம் கொண்டிடின் போற்றுவோம், என்று திறக்கின்றனர் கதவை! உள்ளே விட்டனர் இப்னு கத்தாபை!! பெருமானார், கத்தாப் மைந்தரை நோக்கி வீசினார் சில கேள்விகள், இஸ்லாத்தை வளரச் செய்ய, அவையெல்லாம் வேள்விகள்; "முறை மாறும் பாதையா? இறைக் கோபம் தேவையா? கல்லுருவைக் கடவுளாகத் தொழுவதை விடமாட்டீரோ?? அல்லாஹ்வை ஏகனாகத் தொழ வரமாட்டீரோ?" கனிவுடன் விளம்ப, தெளிவுடன் சொன்னார், கருத்ததில் கண்ணியம் ஏற்றிட்ட உமரவர்; "தேனையொத்த தீனை நான் ஏற்றுக் கொண்டேன் நாயகரே! வானைப் படைத்த ஏகனவன் தூதர் நீங்கள் தூயவரே!!" அகமும் முகமும் குளிர, கட்டியணைத்தார்! அல்லாஹு அக்பர் என்றே மும்முறை முழங்கினார்!! பெருமானார், முந்திய இரவு தொழுது, இறையை நோக்கி அழுது, கேட்ட தேவை நிறைவேறியது! நபித்துவம் பெற்ற ஆறாம் ஆண்டில், இஸ்ல

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் வரும்......வருது.......வந்திருச்சு......... Posted: 09 Sep 2010 08:47 AM PDT எதப் பத்தி நான் சொல்றேனு யோசிக்கிறீங்களா??? இரண்டு விஷயங்கள்.......... முதலாவது ஈதுப் பெருநாள்! இரண்டாவது "நீங்களும் வலைப்பூக்கள் தொடங்கலாம்" என்ற என்னுடைய புத்தகம்!! அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் மனம் நிறைந்த ஈதுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்! இல்லத்தில் பிரியாணி மணமும்........ கைகளில் மருதாணி மணமும்........ சிரிக்கும் கண்களும்...... இனிக்கும் புன்னகையும்........ சுட்டிகளின் கலக்கலும்........ சுந்தர மொழிகளுமாக....... தூரத்து உறவுகள் ஊர் தேடி உவகை புரிய....... தொலைபேசி மணியொலியில் தொலைத்த இன்பங்கள் தேடி வர....... ஊரோடும் உறவோடும் உள்ளார்ந்த சிரிப்போடும் நாயனவன் நாட்டத்தினால் நல்ல செய்தி நாடி வர........ ஈத் முபாரக்! ஈத் முபாரக்!! வறியவர்க்கும்.... உரியவர்க்கும்.... நண்பருக்கும்..... பகைவருக்கும்..... நல்லவர்க்கும்..... தீயவர்க்கும்..... சின்னவர்க்கும்.... பெரியவர்க்கும்..... மனங்கனிந்த ஈத் முபாரக்!!! இரண்டாவது விஷயம்........ ரொம்ப நாளாக எதிர்பார்த்த வலைப்பூ