இடுகைகள்

டிசம்பர் 22, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஈரோடு பதிவர் சந்திப்பு - முன்னும் பின்னும்

படம்
ஈரோடு பதிவர் சந்திப்பு - முன்னும் பின்னும் Posted: 21 Dec 2009 09:25 AM PST பதிவர் சந்திப்பில் நிஜமாகவே நான் கலந்து கொள்வேன் என்று சிறிதும் நினைக்கவில்லை. அதற்கு பல காரணங்கள். நேற்று அவசர அவசரமாக சுடச்சுட விவரங்கள் தர வேண்டும் என்று பதிவிட்டதால், சில சுய விவரக் குறிப்புகளைத் தர முடியவில்லை. நான் கொஞ்சம் நாட்களாக பதிவுலகில் அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை, காரணம் என்னுடைய படிப்பு என்பது என்னுடைய ரெகுலர் வாசகர்களுக்குத் தெரியும். ஒரு நாள் கதிர் சார் அவர்கள், இது குறித்து எனக்கு மெயில் அனுப்பி இருந்தார். பிறகு தான் எனக்கு இப்படி ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதே தெரிந்தது. அவருக்கு போன் செய்த போது, இடம் இன்னமும் முடிவாகவில்லை, முடிவானபின்பு மெயிலில் தெரிவிப்பதாக சொன்னார். சரி, இது பற்றி எழுதியிருக்கும் இடுகைகளைப் படிக்கலாம் என்று அலசினேன்...! அதில் வாலும், இன்னும் ஒருவரும் எழுதியிருந்த இடுகைகளைப் படித்த போது, 'சிகப்பு கம்பள வரவேற்பு', 'திராட்சை ரசம்' போன்ற வார்த்தைகளைப் படித்து சற்று பின் வாங்கி விட்டேன் என்பது தான் உண்மை! அதனால், அது பற்றி அதிகம் சிரத்தை எடு