இடுகைகள்

2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Free Accounting Software

Free Accounting Software:- ஒரு சிறிய நிறுவனத்தை தொடங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அந்நிறுவனத்திற்குரிய வரவு செலவு கணக்குகளைப் பார்க்க வேண்டும். அதற்கான் மென்பொருளை விலைகொடுத்து வாங்க முடியாத சூழ்நிலை. என்ன செய்வது? இதற்கான வழிமுறைகளை அமைத்துக்கொடுக்கிறது இந்த இலவச மென்பொருள். இம்மென்பொருளைப் பயன்படுத்திய உங்கள் வரவு செலவு கணக்குகளைப் பார்க்கலாம். அனைத்து வகையான Accounting கணக்குகளையும் இதன்மூலம் செய்து பயன்பெறலாம். Free Accounting Software நிறுவிக்கொள்ளுங்கள்.  1. Money In 2. Invoice 3. balance sheet 4. Tax 5. Ledger 6. Profit & Loss போன்ற பயன்பாடுகளை ஒரே இடத்தில் இருந்து செய்துகொள்ள முடியும்.  மேலும் ஒரு இடத்தில் கணக்கு தொடங்கிய தகவல்களை மற்ற தொடர்புடைய இடங்களில் அதைப்போன்றே தகவல்களை தானே எடுத்துக்கொள்கிறது. புதியவர்கள் கூட Accounting Software வாங்காமல் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி பயன்பெறலாம். மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிப் பயன்படுத்திப் பாருங்கள். உண்மையிலேயே இந்த இலவச Accounting Software மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று நீங்களே சொல்வீர

உங்கள் நண்பர்களை SMS மூலம் ஏமாற்ற வேண்டுமா?

படம்
உங்கள் நண்பர்களை SMS மூலம் ஏமாற்ற வேண்டுமா? இது கல்வி நோக்கத்திற்காக மாத்திரம் இங்கு சொல்லித்தருகிறேன்.இதை வைத்து பல குற்றச்செயல்களை செய்ய முடிந்தாலும்.அதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் நம்பரை வைத்து , உங்களுக்கே தெரியாமல் பலருக்கு SMS அனுப்ப முடியும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? உங்களை விடுங்கள் ஏன் ஜனாதிபதி என்ற பெயரில் கூட SMS அனுப்பலாம். உங்கள் Mobile இல் இருந்து உங்கள் நண்பருடைய Mobile இற்கு SMS அனுப்பினால்,.உங்கள் நண்பர் இலகுவாக அதை புரிந்து கொள்வார், அதாவது அந்த SMS உங்களிடம் இருந்துதான் வந்தது என்று. அவர் இலகுவாக உங்களை அடையாளம் கண்டமைக்கு காரணம் அந்த SMS இல் உங்கள் Mobile No உம் கூடவே சென்றமைதான் காரணம் (Sender ID your Mobile No) Mobile No இனை மறைத்து SMS அனுப்புவது எப்படி என்று முதலில் சொல்கிறேன்.இதற்கு நல்ல உதாரணம் சொல்லப்போனால் ஜனாதிபதியிடம் இருந்து உங்களுக்கு புதுவருட வாழத்து செய்தி வரும் அல்லவா? அதற்கு உங்களால் Reply பன்ன  முடியுமா? அந்த SMS எந்த நம்பரில் இருந்து வந்தது என்று உங்களால் கண்டுபிக்க முடியுமா? இல்லை தானே? இன்னும் உதாரணம் சொல

சின்ன வெங்காயத்தின் மருத்துவக் குணங்கள்..!

வெங்காயத்துல சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்னு ரெண்டு வகை இருக்கறது பலருக்கு தெரியும். அதேபோல வெள்ளை வெங்காயம்னு ஒண்ணும் இருக்கு. இதுல மருத்துவ குணம் நிறைஞ்சது… சின்ன வெங்காயம்தான்! ஜலதோஷம் வந்தா ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்னு, வெந்நீர் குடிச்சா… ஜலதோஷம் குறையுறதோட தும்மலும் நின்னுடும். கூடவே… நீர்க்கடுப்பு, நீர்எரிச்சல் இதெல்லாமும் குணமாகும். நெஞ்சு படபடப்பு வந்தாலும், சின்ன வெங்காயத்தை தின்னு வெந்நீர் குடிச்சா, உடம்பு சமநிலைக்கு வந்துடும். இதய நோயாளிகளுக்கு இப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்போது முதலுதவி சிகிச்சையா இதை செய்யலாம். பொடியா நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தா ரத்தக்கொதிப்பு குறைஞ்சு, இதயம் பலமாகும். மூல நோயால அவதிப்படுறவங்க சாப்பாட்டுல அதிகமா சின்ன வெங்காயம் சேர்த்துக்கறது நல்லது. நீர்மோர்ல சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடிச்சாலும் பலன் கிடைக்கும். வெளிமூலம் உள்ளவங்க, சின்ன வெங்காயத்தை வதக்கி, பிரச்னை உள்ள இடத்துல வெச்சுக்கிட்டா பலன் கிடைக்கும் (வெள்ளை வெங்காயத்தை அப்பப்போ நல்லெண்ணய் விட்டு வதக்கிச் சாப்பிட்டாலும் மூ

#வாழை #இலையின் #பயன்கள்

1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். 2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும். 3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும். 4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும். 5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும். 6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும். 7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும். தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில

எனது உறவுகளுக்கு ஓர் நற்செய்தி!

ஆள பிறந்தவனே ஓடிவா...! பொய் சொல்லி தப்பிக்காதே  உண்மையை சொல்லி மாட்டிக்கொள் பொய் வாழ விடாது  உண்மை சாக விடாது -விவேகானந்தர் இதயம் சொல்வதை செய்  வெற்றியோ  தோல்வியோ  அதை  தாங்கும் சக்தி  அதற்கு மட்டும் தான் உண்டு -விவேகானந்தர் தன்னை அறிந்தவன்  ஆசை பட மாட்டான்  உலகை அறிந்தவன்  கோவ பட மாட்டான்  இந்த இரண்டையும்  உணர்ந்தவன்  துன்ப பட மாட்டான் -பகவத் கீதை யார் என்ன சொன்னாலும்  உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே  ஒரு சமயம் நீ மாற்றினால்  ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டிஇருக்கும் -கண்ணதாசன் வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால்  நல்ல நண்பர்கள் தேவை  வாழ்நாள் முழுவதும்  வெற்றி பெற வேண்டுமானால்  ஒரு எதிரியாவது தேவை - A .P . J . அப்துல்கலாம் ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட  தோற்பது எப்படி என்று யோசித்து பார்  நீ  ஜெயித்து விடுவாய் -ஹிட்லர் அவமானங்களை சேகரித்து வை  வெற்றி உன்னை தேடி வரும் -A .R . ரகுமான் தோல்வி உன்னை துரத்துகிறது என்றால்  வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம் -நெப்போலியன் கோவம் என்பது  பிறர் செய்யும் தவறுக்கு  உனக்கு நீயே  கொடுத்து கொள்ளும் தண்டனை -புத்தர் விதைத்தவன் உறங்

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்!

வெங்காயத்தை ஆனியன் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள். வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்? 1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். 2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும். 3. வெங்

எப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உங்களுக்கு உதவும் 21 குறிப்புகள்

எப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உங்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே… 1. தினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளை சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இருதய நோய் அபாயம் வெகுவாக குறையும். ஆயுளில் மூன்றாண்டுகளை அதிகரிகëகும் என்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சி யாளர்கள். இருதயத்துக்கு ஆரோக்கியம் அளிக்கும் நல்ல கொழுப்பு, ஒட்டுமொத்த நலத்தைக் காக்கும் `செலினியம்’ ஆகியவை கொட்டை வகை உணவுகளின் சொத்து. 2. உங்கள் உணவில் வாரத்தில் இருமுறை மீன் இருக்கட்டும். இரண்டில் ஒன்று எண்ணை வகை மீனாக இருந்தால் நல்லது. கொலஸ்ட்ராலை குறைத்து, இருதய நோய் அபாயத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய `ஒமேகா 3 பேட்டி ஆசிட்’, எண்ணை செறிந்த மீன்களில் அதிகம் உள்ளது. 3. சாப்பாடுகளுக்கு இடையே 3 மணி நேர இடை வெளி அவசியம். மூன்று பிரதான உணவுகளில் காலை உணவை முழுமையாக சாப்பிடுங்கள். 4. தினசரி நான்கு `கப்’ காபி பருகலாம். ஆரோக்கியம் காக்கிறேன பேர்வழி எனறு காபியையே துறக்க வேண்டாம். அளவாக காபி பருகுவது, சர்க்கரை நோய், உணவுக் குழாய் கேன்சர், ஈரல் நோய்களைத் தடுக்கும் என்பது ஆய்வாளர்கள் கருத்து. 5. த

நுரையீரல் புற்று நோயை தடுக்கும் ஒரு அருமையான பானம்!!

நுரையீரல் புற்று நோயை தடுக்கும் ஒரு அருமையான பானம்!! பிடிப்பதால் ஏற்படும் மிகக் கொடிய நோய்களுள் ஒன்று தான் நுரையீரல் புற்றுநோய். புகையிலையில் உள்ள அதிகப்படியான நச்சுப் பொருட்கள் தான் இதற்குக் காரணம். மனித உடலுறுப்புகளில் முக்கியமான ஒன்று நுரையீரல். புகைப்பிடிப்பதால் ஆக்ஸிஜனோடு சேர்த்து நச்சுப் பொருட்களான நிக்கோடின், தார் மற்றும் காட்மியம் போன்றவையும் உள்ளே சென்று நுரையீரலின் உள்ளே தங்கிவிடும். இவையெல்லாம் அதிகமாக சேரும் போது நுரையீரல் கருப்பாக மாறுகிறது. அப்படிப்பட்ட நச்சுப் பொருட்களில் இருந்து உங்களது நுரையீரலிலை காப்பாற்றி, நுரையீரல் புற்றுநோயில் இருந்தும் காப்பாற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆரோக்கியமான ஜூஸை தயாரித்து குடித்துப் பாருங்கள். இப்போது அந்த ஜூஸ் செய்யத் தேவையான பொருட்களையும், எப்படி செய்வது என்பதனையும் பார்ப்போம் வாருங்கள்... இஞ்சி ஒரு பெரியத் துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சியில் நோய் தொற்றுகளை நீக்கும் பண்பும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் அதிக அளவில் உள்ளது. மஞ்சள் தூள் 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள்

அமைதியான ஆட்கொல்லி நோயைப் பற்றி தெரியுமா?

 அமைதியாக இருந்துகொண்டு திடீரென ஒருவரை ஆபத்தான நிலைக்குத் தள்ளிவிடக்கூடிய நோய் இது. சில பெரிய நோய்களுக்கெல்லாம் இந்த நோய்தான் கதவைத் திறந்துவிடும். அதுதான் உயர் ரத்த அழுத்த நோய் அல்லது ரத்தக்கொதிப்பு. மாரடைப்பு, பக்க வாதம், மூளை ரத்தக் குழாய் வெடிப்பு, அறிவுத்திறன் குறைபாடு, சிறுநீரகம் செயலிழத்தல் உள்ளிட்ட பெரிய நோய்களுக்குச் சிவப்பு கம்பளம் விரிக்கும் இந்த உயர் ரத்த அழுத்த நோயை எப்படித் தடுப்பது? நோய் வந்தவர்கள் எப்படிக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது? முதலில் நோயைச் சரியாகப் புரிந்துகொள்வதுதான் சிறந்த வழி. எப்படி வருகிறது? # மனித உடலில் உள்ள ரத்தக் குழாய்கள் வழியாக ரத்தம் ஓடுகிறது. அப்படி ரத்தம் இதயத்துக்கு வரும்போது குறிப்பிட்ட வேகத்தில் வரும். இதயத்திலிருந்து வெளியே செல்லும்போது வேறொரு வேகத்தில் செல்லும். இந்த வேகத்துக்குப் பெயர்தான் ரத்த அழுத்தம். பொதுவாக ஒருவருக்கு ரத்த அழுத்தம் 120/80 மி.மீ. என்ற பாதரச அளவில் இருந்தால், அது இயல்பானது, பிரச்சினையில்லை. # 120 என்பது சிஸ்டாலிக் அழுத்தம். அதாவது, இதயம் சுருங்கி ரத்தத்தை உடலுக்குத் தள்ளும்போது ஏற்படுகிற அழுத்தம். # 80 எ

முகத்தில் உள்ள கருமை இரண்டே நாட்களில் நீங்க சில அற்புத வழிகள்

கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது. இத்தனை நாட்கள் பொத்தி பொத்தி காப்பாற்றி வந்த சருமம், கோடையில் நொடியில் கருமையாகிவிடும். இப்படி சருமத்தின் நிறம் கருமையாவதால், தற்போது பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் வருந்துகிறார்கள். மேலும் பெண்களை விட ஆண்கள் தங்கள் சருமத்திற்கு அதிக பராமரிப்புக்களை கொடுக்க முன் வருகின்றனர். இதற்காக வேலைப்பளு அதிகம் இருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாமல், சருமத்தின் நிறத்தை அதிகரிக்க ஆண்களும் பல வழிகளை பின்பற்றி வருகின்றனர். எனவே கோடையில் கருமையாகும் சருமத்தின் நிறத்தை வெள்ளையாக மாற்ற சில அற்புதமான இயற்கை வழிகளை பட்டியலிட்டுள்ளது. இந்த இயற்கை வழிகள் அனைத்தும் பாதுகாப்பானவையே. ஆகவே அதைப் படித்து அவற்றை அன்றாடம் பின்பற்றி, உங்கள் சருமத்தின் நிறத்தை பாதுகாப்பதோடு, அதிகரித்துக் கொள்ளுங்கள். பேக்கிங் சோடா பேஸ்ட் பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் செய்து

20 வகையான பாட்டி வைத்தியம்

நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். தொடர் விக்கல் நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். உதட்டு வெடிப்பு கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும். அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். குடல்புண் மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல்