இடுகைகள்

நவம்பர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் அரபு சீமையிலே... - 25 Posted: 01 Nov 2010 10:10 AM PDT பத்தாண்டு முடிந்தது நபித்துவம் பெற்று புத்தாண்டுக்கு முந்தய துல்ஹஜ் வந்தது ஹஜ்ஜுக்குக் கூடிய மக்களில் பசுந்தானியம் விளையும் பழத்தோட்டங்களும் கனிந்த பேரிச்சையும் தெளிந்த நீரோடையும் நிறைந்த யத்ரிப் நகரத்து யாத்ரிகர்கள் குழுமினர். மினாவுக்கு அருகில் அவர்தம் கூடாரம் – சென்று நபிகளார் செய்தார் பிரச்சாரம். நல்லொழுக்க மக்கள் பலர் முன்னொழுகி வந்ததனால் மார்க்கமருகி போனது, தீர்க்கதரிசி ஏற்றது! பூசல் பிணக்கு ஒழிந்திட வாசலாக அமைந்தது! நாசவேலை குறைந்திட நாளும் பொழுதும் பிறந்தது!! அவ்ஸ், கஸ்ரஜ் என்று கோத்திரம் இரண்டு! கோத்திரத்துக்குள்ளே சாத்திரம் நூறு!! – அதனால் ஆத்திரம் பலமடங்கு! சாத்தியம் உணர்ந்து நபிகள்(ஸல்) சாதகமாக்க, வேற்றுமை மறந்து வெற்றியும் கிடைத்தது! அஸ்அத், அவ்பு, ரபீஆ, குத்பா, உத்பா, ஜாபிர் என அறுவரும் இஸ்லாத்தை பெறுவராய், எடுத்துவைத்த தூதுவத்தை நபிகளாரின் மாதவத்தார், சிரமேற்றுக் கொண்டார்கள்; பெருவாழ்வு கண்டார்கள்! அடியொற்றி பலரும் இறைவனது சந்ந

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் அரபு சீமையிலே... - 23 அரபு சீமையிலே... - 22 அரபு சீமையிலே... - 21 அரபு சீமையிலே... - 20 அரபு சீமையிலே... - 23 Posted: 31 Oct 2010 10:28 AM PDT சோதனையைக் கண்டு மனம் வேதனையை அடையப் பெற்று, ஜைதவரும் நபிகளிடம், வன்னெஞ்சை சபிக்க சொன்னார்!!! காருண்யக் கடலாம் காத்தமுந்நபிகளோ, 'நெறிப்படுத்தத் தரித்துள்ளேன், சாபமிட அல்ல, அறியாமை இருளகல பாபம்போம் மெல்ல, ஒரு நாள் இம்மக்களெல்லாம் நேர்வழியில் வருவார்கள், ஒரு காலும் வராவிட்டால், வழித்தோன்றல் வருவார்கள்! – என் வறிய நிலை நீக்கிவிட வல்லவனே போதுமப்பா! உரிய பதில் அவன் தருவான், உண்மை என்றும் வெல்லுமப்பா!' தளராத மனதோடு தக்க பதில் தந்தநபி, கண்ணிறைந்த நீரோடு, கையிரண்டை ஏந்தியவர் கருத்ததிலே கவலைகொண்டு வல்ல இறையை வேண்டிநின்றார். இளைப்பாறி களைப்பாறி முனைப்போடு தடுமாறி முன்னெட்டு வைத்தவரும் சின்னாட்கள் பயணப்பட, சிரமங்கள் இருந்தாலும் கருமத்தில் கண்ணாக, இஸ்லாத்தின் தூததனை இதமாக எடுத்தோத, மண்ணினத்து ஜின்களெல்லாம், மறையோதி முறைதழுவ, சீறாப்புதல்வரவர், ஹீரா குக