இடுகைகள்

பிப்ரவரி 7, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எளிய வீட்டு மருந்துகள்

படம்
எளிய வீட்டு மருந்துகள் ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும். உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும். ... அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும். பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு சரியாகும். சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும். மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும். துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி மூளை பலம் பெறும். மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும். வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும். பொடித்த படிகாரத்தை

கை முட்டிகளில் உள்ள கருமை நிறம் மறைய

படம்
கை முட்டிகளில் உள்ள கருமை நிறம் மறைய டிப்ஸ் - இயற்கை வைத்தியம் சிலர் பார்க்க நல்ல கலராக இருந்தாலும் கை, கால் முட்டிகளில் கருப்பாக இருக்கும். நன்கு தேய்த்துக் குளித்தாலும் அந்த நிறம் மாற மாட்டேனென்கிறது என்று புலம்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எளிய தீர்வு உள்ளது. ஒரு கொய்யாப்பழம் எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்தால் ‘ஸ்க்ரப்’ போல வரும். அத்துடன் ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாறை எடுத்துக் கலந்து கை, கால், மூட்டுகளில் நன்கு தேய்த்து மசாஜ் செய்து நன்றாக காய்ந்ததும் கழுவவும். பிறகு அந்த இடத்தில் மாய்ஸ்சரைசர் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 வாரம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பால், தேன், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கலக்கி, கருப்பான இடங்களில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இதுவும் விரைவில் நல்ல பலனைத்தரும். தேவைப்பட்டால் பாதாம் பவுடர் சேர்த்துக் கொள்ளலாம். ஆரஞ்சு தோல் பவுடர், பால் இவற்றை சம அளவில் எடுத்து ஒன்றாக குழைத்து முட்டிகளில் பூசி 15 நிமிடத்துக்கு பிறகு கழுவி வந்தாலும் படிப்படியாக கருப்பு நிறம் மாறும். இதனை தினமும் செய்து வர வேண்டும்.

புகைப்பதை நிறுத்தினால்...

படம்
புகைப்பதை நிறுத்தினால்... 20 நிமிடங்களில்... ரத்த அழுத்தம் இயல்புநிலைக்குத் திரும்புகிறது. ‘பல்ஸ் ரேட்’ இயல்பாகிறது. கை, காலில் அதிகரித்த வெப்பம் இயல்புநிலைக்குத் திரும்புகிறது. 8 மணி நேரத்தில்... ரத்தத்தில் கார்பன் மோனாக்சைட் அளவு குறைந்து இயல்புநிலைக்குத் திரும்புகிறது. ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது. அல்லது இயல்பு நிலைக்கு வருகிறது. 48 மணி நேரத்தில்... நரம்பு மண்டலத்தின் கடைக்கோடி முனை மறுவளர்ச்சியடைகிறது. நுகரும் மற்றும் சுவைத் திறன் அதிகரிக்கிறது. 2-12 வாரங்களில்... மூச்சுவிடும் திறன் மேம்படுகிறது. ரத்த ஓட்டம் மேம்படுகிறது. நடப்பது எளிமையாகிறது. 1-9 மாதங்களில்... தொடர் இருமல் மற்றும் சைனஸ் பிரச்னை குறைகிறது. மூச்சுத்திணறல் பிரச்னை குறைகிறது. ஒட்டுமொத்த ஆற்றல் மேம்படுகிறது. நுரையீரல் தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் திறனும், கிருமிகளை எதிர்க்கும் திறனும் அதிகரிக்கிறது. 1ஆண்டில்... இதய நோய்க்கான வாய்ப்பு பாதியாகக் குறைகிறது. 5 ஆண்டுகளில்... பக்கவாதத்துக்கான வாய்ப்பு குறைந்து, புகைபிடிக்காதவர்களுக்கு இணையான நிலைக்குத் திரும்புகிறது. வாய், தொண்டைப் புற்று நோய்க்கான வாய்ப்பு, புகைபி

காதலிக்கும் போது பெண்கள் கட்டாயப்படுத்தப்படும் விஷயங்கள்!

படம்
காதலிக்கும் போது பெண்கள் கட்டாயப்படுத்தப்படும் விஷயங்கள்! ஒரு புதிய உறவு என்றால் அதில் இனிமையான பல தருணங்களும் பேரின்பங்களும் இருக்கும். அனைத்தும் நல்ல விதமாக செல்ல வேண்டுமானால், தனியாக வாழ்ந்த காலத்தில் உங்களுக்கு மகிழ்ச்சியை அளித்து வந்த பல செயல்பாடுகளை நீங்கள் மூட்டை கட்டி வைக்க வேண்டும். ஆனால் தாங்கள் நினைத்ததை விட அதிக அளவில் இழந்ததை தேனிலவு காலத்திற்கு பிறகு தான் பலரும் உணர்வார்கள். ஒரு கட்டத்தில் இது கட்டாயப்படுத்தப்படுகிற விஷயமாகி விடும். ஒரு உறவு என்று வந்து விட்டால், ஆண்களை விட பெண்களே அதிக உணர்ச்சிவசப்பட்டவர்கள். ஒரு உறவு நல்லபடியாக தொடர, பெண்கள் தான் பல விஷயங்களை விட்டுக் கொடுக்கின்றனர். உங்கள் உறவு பிரச்சனை இல்லாமல் தொடர, நீங்கள் தான் அதிக சிரத்தை எடுத்துக் கொள்கிறீர்கள் என்றும், உங்கள் துணை எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை என. ஒரு உறவு நல்லபடியாக செல்ல ஒரு பெண் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது. 1.தேவையான நேரத்தில் மட்டும் பேச வேண்டும் எந்த ஒரு சூழ்நிலையும் பெண்களால் வாயை மூடிக்கொண்டு இருக்க முடியாது. எப்போது பேச வேண்டும், எப்போது அமைதி காக்க வேண்டும் என தெரிந்

பெண்களே! உங்கள் கணவன் / காதலனை சுலபமாக புரிந்து கொள்ள .

படம்
பெண்களே! உங்கள் கணவன் / காதலனை சுலபமாக புரிந்து கொள்ள . ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் காதலன் அல்லது கணவ னை பற்றி அதிகமாக தெ ரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். அப்படி தெரிந் து கொள்ளும்போதுதா ன் அந்த உறவில் அவர் களின் நிலை என்னவெ ன்று அவர்களுக்கு புரியு ம். அல்லது அந்த உறவி ல் உள்ள அர்த்தத்தை அவர்களால் புரிந்து கொள்ளமுடியும். உங்கள் கணவன் அல் லது காதலனை சுலபமாக புரிந்து கொள்ளலாம் என்று நீங்க ள் நினைக்கலாம். ஆனால் நீங்கள் நினை க்கும் அளவிற்கு அது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை. அவ ரைபற்றி ஆழமாக தெ ரிந்து கொள்ள நீங்கள் முற்படும்போது அத னை நீங்கள் மென்மையாக கையாள வேண்டும். பொதுவா க ஆண்கள் தங்களை பற்றிய விஷயங்களை அவ்வளவு சுல பத்தில் திறப்பதில்லை . அவர்க ளுக்கென ஒரு வேலி போட்டு கொண்டு வாழ்வார்கள். அத னால் அவர்களை பற்றி தெரிந் துகொள்வதில் அதிக சிரத்தை எடுக்க வேண்டி வரும். அவரை பற்றி நன்றாக புரிந்து கொள்ள அவரை பற்றிய தக வல்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பொறுமையை முக்கிய ஆயுதமா க பயன்படுத்த வேண்டும். உங்கள் உறவில் அவரை பற்றி தெரிந்து கொள்ள பல வழிகள் உள்ளது. அவரை பற்றி நன்றாக தெரிந்த

கணவன் எரிச்சலடையும் மனைவியின் சில செயல்கள்

படம்
கணவன் எரிச்சலடையும் மனைவியின் சில செயல்கள் மனைவி செய்யும் சில செயல்கள் கணவருக்கு பிடிப்பதில்லை. இந்த செயல்களால் தான் இருவருக்கும் பிரச்சனை ஏற்படுவதும், இதனால் கருத்து வேறுபாடுகள் ஏற்படவும் தொடங்குகிறது. பெண்களின் பல செயல்கள் ஆண்களுக்கு பிடிக்காமல் இருந்தாலும் அதிக எரிச்சலைத்தரக்கூடியவை சில உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.. 1. சின்ன விஷயத்திற்கெல்லாம் கணவனை துணைக்கு அழைப்பது 2. ஏதோ சொல்ல வந்து பின் ‘அதை விடுங்க’ என பொடி வைத்து பேசுவது. மூடி மறைத்து கணவனை உஷ்ணபடுத்துவது. 3. ‘அன்பு’ என்ற பெயரில் ஆயிரம் ‘போன்கால்’ பண்ணி நச்சரிப்பது. 4. எதற்கெடுத்தாலும் அழுது வடிவது. அழும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது. ஆனால் பெண்கள் காரணம் சாதிக்க அழுது நடிப்பார்கள். 5. ‘இவங்க தப்பா நினைப்பாங்க அவங்க தப்பா நினைப்பாங்க’ என்று தனக்காக வாழாமல் சமூகத்திற்கு பயந்து பயந்து வாழ்வது. 6. சாப்பிடும் நேரம் பார்த்து குடும்ப பிரச்சினைகளை கிளறுவது. நமக்காக இரவில் சாப்பிடாமல் காத்து கொண்டிருப்பது . 7. வீட்டை அலங்கோலமாக போட்டு வைப்பது. 8. நண்பர்களை பற்றி தவறாக பேசுவது. 9. வேலைக்கு போகும் பெண்ணாக இருந

திருவோடு - இதுவரை நமக்கு தெரியாத தகவல்..

படம்
திருவோடு - இதுவரை நமக்கு தெரியாத தகவல்.. நம்மூரில் சாமியார்கள் கைகளில் திருவோடு வைத்திருப்பதை பார்த்திருப் பீர்கள், அதில் அவர்கள் யாசகம் பெற்று உயிர் வாழ்வார்கள். இந்த திருவோடு ஒரு மரத்தின் விதை என்றால் நம்ப முடி கிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால், அதுதான் உண்மை. இந்த திருவோடு உலகத்திலேயே மிகப் பெரிய விதையான கடல் தேங்காயின் ஓடு. கடல் தேங்காய்க்கு நிறைய பெயர்கள் உண்டு. திருவோட்டுக்காய், இரட்டைத் தேங்காய், கடல் பனை, மாலத்தீவுத் தேங்காய் என்று. இதன் விதைகளை பாதியாக அறுத்து சுத்தம் செய்து திருவோடாக மாற்றுகிறார்கள். திருவோட்டுக்காய் பார்ப்பதற்கு பெரிய சைஸ் தேங்காய் போலவே இருக்கும். மரமோ பனை மரம் போல இருக்கும். இதன் பிறப்பிடம் ‘சிசெல்ஸ்‘ தீவுகள். இவை எல்லா இடங்களிலும் வளர்வது இல்லை. இந்தியப் பெருங்கடலில் பிரஸ்லின் என்ற தீவில்தான் அதிகமாக வளர்கிறது. இதிலும் பனை மரத்தை போலவே ஆணும், பெண்ணும் உண்டு. ஆண் மரங்கள் 6 அடி நீளம் கொண்ட பூக்களை மலர்விக்கின்றன. பெண் மரங்கள் முளைக்கத் தொடங்கி 100 வருடங்கள் கழித்தே பூக்கத் தொடங்குகின்றன. பூ மலர்ந்து காயாக மாறி முற்றுவதற்கு 10 வருடங்கள் ஆகும். கா

கணினியைப் பராமரிப்பது எப்படி?

படம்
கணினியைப் பராமரிப்பது எப்படி?               <img class="aligncenter wp-image-10353 size-full" title="Computer Maintenance" src="http://www.giriblog.com/wp-content/uploads/2015/01/Computer-Maintenance.jpg" alt="Computer Maintenance" width="700" height="467" /> ப லர் “என்னுடையைக் கணினி அடிக்கடி ஏதாவது மென்பொருள் பிரச்சனை கொடுக்கிறது. dll Error அல்லது Application error என்று ஏதாவது பிரச்சனை வந்து கொண்டு இருக்கிறது. அதோடு, கணினி மிகவும் மெதுவாக வேலை செய்கிறது” என்று கூறக் கேட்டு இருப்பீர்கள். ஏன்! நீங்களே இது போலப் புலம்பிக் கொண்டு இருக்கலாம். இதற்கெல்லாம் காரணம் கணினியை சரியாகப் பராமரிக்காதது தான். Image Credit – wefixcomputers.net “இலவசம்” என்றால் அதனால் நமக்குப் பயன் இருக்கிறதோ இல்லையோ அதைப் பெற வேண்டும் என்ற எண்ணம் பலரிடையே இருக்கிறது. முதலில் அனைவரும் ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். உலகில் இலவசம் என்று எதுவுமில்லை. இலவசம் என்றால், அதைக் கொடுப்பவருக்கு அதனால் நேரடியாகவோ மறைமுகவோ பலன் இருந்த