இடுகைகள்

டிசம்பர் 28, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாது மிரண்டால்...

படம்
சாது மிரண்டால்... Posted: 27 Dec 2009 07:08 AM PST பத்து பேர் சேர்ந்து கூக்குரலிட்டால், பஞ்சு நஞ்சாகிடுமா? வெத்து வேட்டுக்களின் வித்தையிங்கு நஞ்சை விஞ்சிவிடுமா?? இனமானம் காக்க தூக்கிய கூஜா நொருங்கிப் போகுது பாவம்! கூஜாவின் கழுத்தையும் மாதவர் இடுப்பாக காமத்தின் கண்பார்க்கும் சோகம்!! உம்மின ஆண்கூட குடிக்க மாட்டார்களா??? என்று கேள்வி எழுப்பி, தம்வீட்டு பெண்களும் குடிப்பார்கள் என்று பறைசாற்றி, தம்மை, நற்'குடி'யாகக் காட்டிக் கொண்ட தகர டப்பாக்கள்! கருப்பென்று கருவிழியை பிடுங்கி எறிந்து விட்டு, கருப்பென்று தலைமுடி மீசையும் மழித்துவிட்டு, பரிதாபக் கோலத்தில் தன்மானக் காவலர்கள்!! மதிமயக்கும் பானத்தைக் குடித்தாட்டம் போட்டு, விஷம் தோய்த்த பானத்தை விதிமேலே தொடுத்து, மயங்கியொரு போதையிலே முயங்கியாடும் கும்மாளம்! பசுபோட்ட சாணத்தை தலைமேலே ஏற்றி, பெண்ணினத்தின் நாணத்தை காலாலே நசுக்கி, சுயவிளம்பரம் தேடிக்கொள்ளும் கயவர்களின் பட்டாளம்!! மூடிவைத்த பதார்த்தத்தில் வாசம் வராதென்று, திறந்து வைத்து, தேடிவரும் ஈசலுக்கும், நாடிவரும் எறும்புக்கும் இரையாக்கு