இடுகைகள்

ஜனவரி 31, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அரபு சீமையிலே.... - 14

படம்
அரபு சீமையிலே.... - 14 Posted: 30 Jan 2010 10:23 AM PST இறையின் நினைவில் குறையா அருளில் குன்றா நம்பிக்கை நன்றாய் கொண்டு, பெருமகன் முஹமது சீராய் மணந்து, அருந்தவம் கிடந்தார் ஹீரா குகையில்! புனித ரமலான் மாதத்தில் இனியதொரு பிறையன்று, இறங்கியதே இறை செய்தி! உறங்கியதே தீய சக்தி!! இருளின் ஊடே ஒளியாய் தோன்றி, அருளின் வடிவாய் நின்றார் ஜிப்ரீல்! ஏகனின் தூதர் வாகையை சூட, வல்லவன் செய்தியை நல்லவரிடம் சேர்த்து, வானவர் கோமான் ஆணைகள் போட, "ஓதுவீராக!" என்றவரிடத்தில், ஓதத்தெரியாதென, மருண்டார் நபிகள்! மும்முறை சொல்ல, முயற்சிகள் வெல்ல, செம்மறை திருமறை செழிப்பாய் இறங்க, கண்மணி முஹமது(ஸல்) நன்மணி நாயகர் தூதை ஏற்று தூயவராக, போதம் தாங்கி மனையிடம் ஏக, மறைபொருளாலே மனமெல்லாம் அஞ்சி, மனைத்துணை கதீஜா அருகில் துஞ்ச, ஆறுதல் சொல்ல, தேறுதல் கொண்டார்! ஆறுமாதம் சென்று வேறொரு இறைசெய்திவர மாறுதல் ஏற்று மாட்சிமை உரைத்தார்!! இறுதிநபி தானென்ற உறுதி உள்ளத்தில் நிறைத்தார்!! நாயகத்திருமேனியின் சிறிய தந்தை புதல்வர் ஆறு வயது சிறுவன் அலியார், அண்ணலாருடன் இணைந்து இறைவணக்