இடுகைகள்

செப்டம்பர் 26, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மற்றுமொரு மாயை

படம்
எண்ணங்களில் க‌ண்டு ம‌கிழ்ந்து தேன்மொழிக‌ள் உண்டு களித்து தேடுத‌லில் தீண்டி உணர்ந்து காடு, க‌ட‌ல், ம‌லை க‌ட‌ந்து காற்றில் வ‌ரும் அவ‌ள் சுவாச‌ம் நுக‌ர்ந்து ர‌க‌சியமாய் அக‌ம‌கிழ்ந்து சுழலும் கிரகம் சுற்றித் திரிந்து அவளை தேடி, நானும் தொலைந்து வலுவிழந்து, கண்ணயர்ந்தேன்!! இதோ, மதி மயக்கி எனக்குள் புகுந்து ஆழ்மனதினுள்ளே கசிந்து ஆளுகையில் எனை கொணர்ந்து மகுடம் சூடி 'அவள்' செய்த‌‌ ‌ம‌ற்றுமொரு மாயையிது!!

பத்து ஆசைகளை

1.வேற்றுமையில் ஒற்றுமை காணும் மனப்பக்குவம், நமது நட்புக்களிடம் நான் கண்டு மகிழும் அழகிய குணம், அது அனைவரிடத்திலும் இருந்தால் உலகம் அமைதி பூங்கா தான். 2.எனது பள்ளிப்பருவம் திரும்ப கிடைத்தால் மகிழ்ச்சி!! கிடைக்காது, ஆனால் இன்றைய பள்ளிப்பருவத்தில் இருக்கும் சிறார்கள் இந்த வாய்ப்பு கிடைக்காததற்க்கு வறுமை தான் பெரும்பாலும் காரணம், அந்த வறுமை ஒழிய வேண்டும். 3.மழை வந்தால், புயல், வெள்ளம் என திண்டாட்டம், இல்லையெனில் வறட்சி, பஞ்சம், இவற்றை உண்மையிலேயே புரிந்து கொண்ட அரசாங்கமும், இவற்றை சமாளிக்கக் கூடிய எதிர் நோக்கத்திட்டங்கள் கொண்ட மனிதர்களும். 4.புகை, மது, போதை இவை கேடு எனத் தெரிந்தும் உபயோகிப்பவர்கள், இந்த இடுகையை படித்ததும் கொடிய இந்த பழக்கங்களை விட்டு விட வேண்டும். 5.தற்பெருமை கொள்ளும் அளவுக்கு வசதி வாய்ப்புகள் வரவில்லை, நாளைக்கு பெரிய ஆளாகி விட்டால், அப்படி ஒன்று வேண்டாம் ஒரு பொழுதும். 6.கண்ட இடத்தில் குப்பை கொட்டுவது, எச்சில் துப்புவது, இது போன்ற பொது இடங்களை நாசமாக்குவோர் இப்பொழுதே திருந்த வேண்டும். 7.வேலை வாய்ப்பு பெருக வேண்டும், கிடைத்த வாய்ப்பை நழுவ விடாதவர்களும், வாய்ப்ப

வாழ்வின் இனிமை

படம்
’என்’ எழுத்து இகழேல் வாழ்வின் இனிமை Posted: 25 Sep 2009 09:53 AM PDT பாசமலர் பூவிலே, பனிபடர்ந்த மலையிலே, நேசம் கொண்ட உறவிலே, நாளும் உந்தன் நினைப்பிலே! பச்சைக் கிளியின் மொழியிலே, கூவும் குயிலின் ஒளியிலே, இச்சை கொண்ட பார்வையே, யாவும் யாவும் இனிமையே! அன்பன் உந்தன் முகத்திலே, வழியும் அந்த எழிலையே, மிச்சம் மீதி இல்லாமல், ரசிக்க மனது இனிக்குதே! கண்ணா உந்தன் குரலுமே, கவிதையாக தெரியுதே! மின்னல் போன்ற சிரிப்பென்னை பித்துப் பிடிக்க வைக்குதே! நெஞ்சில் சாய கனவுகள், மேலே மேலே போகுதே! பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் பற்றிக் கொள்ளப் போகுதே! நீயும் நானும் ஒன்னுதான் பூவும் மலரும் ஒன்னுதான்! வாழ்வின் இனிமை காதல் தான் வாழ்ந்து காட்டி ஜெயிப்பமே!! -சுமஜ்லா ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி! You are subscribed to email updates from ‘என்’ எழுத்து இகழேல் To stop receiving these emails, you may unsubscribe now . Email delivery powered by Google Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610