இடுகைகள்

ஜனவரி, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:- *அருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பொடி :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது *கடுக்காய் பொடி :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். *வில்வம் பொடி :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது *அமுக்கலா பொடி :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. *சிறுகுறிஞான் பொடி :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். *நவால் பொடி :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது. *வல்லாரை பொடி :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது. *தூதுவளை பொடி :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது. *துளசி பொடி :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது. *ஆவரம்பூ பொடி :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும். *கண்டங்கத்திரி பொடி :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது. *ரோஜாபூ பொடி :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும். *ஓரிதழ் தாமரை பொடி :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாக

( lipstick ) லிப்டிக் பூசுபவர்களின் கவனத்திற்கு..!

படம்
( lipstick ) லிப்டிக் பூசுபவர்களின் கவனத்திற்கு..! ************************************************************** வேலைக்கு போகும் பெண்கள், திருமணம் மற்றும் விழாக்களுக்கு செல்லும் இல்லத்தரசிகள் ‘lipstick’ பூசாமல் வெளியே செல்வதில்லை. உதட்டில் lipstick பூசியே செல்கின்றனர். அவர்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் புதிதாக ஆய்வு முடிவு ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி lipstickக்கில் உள்ள ராசயனம் இருதய நோயை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞான ... ிகள் எலிகளிடம் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். lipstickகில் உள்ள டிரைக்ளோசன் என்ற ரசாயனம் எலிகளுக்கு கொடுக்கப்பட்டு 20 நிமிடத்திலேயே அவற்றின் இருதய செயல்பாட்டை படிப்படியாக குறைத்தது. ஆகவே, மனித உடல்களிலும் இது நடக்கலாம் என எச்சரித்துள்ளனர். டிரைக்கோளன் வீட்டு உபயோக சுத்தம் செய்யும் பொருட்களிள் அனைத்திலும் உள்ளது. இது மனித உடலுக்கு மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க கூடியது. இது இருதயம் உள்பட மூளையில் இருந்து செய்திகளை வாங்கும் தசைகளின் செயல்பாடுகளை முடக்குவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எல

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு!

படம்
விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! - இது எப்படி ஏற்படுகிறது? **************************************************************************** நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது. உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன. நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம். தலைவலி : நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’ என்று கூறி தப்பித்து கொள்கிறோம். ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்? வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் எ

இஞ்சிப் பால்..! சாப்பிட்டால்…..

படம்
இஞ்சிப் பால்..! சாப்பிட்டால்….. ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி? ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் ... தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும். அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும். அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்? 1. நுரையீரல் சுத்தமாகும். 2. சளியை ஒழுச்சு கட்டிடும். 3. வாயுத் தொல்லை என்பதே வராது. 4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும். 5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம். 6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும். 7. ஒல்லி

தகுதி இருந்தால் எல்லாம் உன்னை தேடி வரும்

இங்கிலாந்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் ஒரு முறை கிராமங்களை சுற்றிப் பார்க்க குதிரையில் கிளம்பிச் சென்றார்.அப்போது வயலில் ஒரே ஒரு பெண் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தார். மன்னர் அவரிடம்,''மற்றவர்கள் எல்லாம் எங்கே?''என்று கேட்க, விசாரிப்பது மன்னர் என்பதை அறியாத அந்த பெண் ,''அவர்கள் எல்லாம் மன்னரைப் பார்க்கப் போயிருக்கிறார்கள்,'' என்று சொன்னார். ''அப்படியானால் நீங்கள் மட்டும் ஏன் போகவில்லை?''என்று மன்னர் கேட்டார். ... அதற்கு அந்தப்பெண்,''மன்னரைப் பார்ப்பதற்காக ஒருநாள் கூலியை இழக்கும் அளவிற்கு நான் முட்டாள் இல்லை.எனக்கு ஐந்து குழந்தைகள்.அவர்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது.அதனால்தான் போகவில்லை,''என்றார். மன்னர் அவரது கையில் சில நூறு பவுண்டு பணத்தைக் கொடுத்துவிட்டு,''உங்களது நண்பர்களிடம் சொல்லுங்கள்.நீங்கள் எல்லாம் மன்னரைப் பார்க்க சென்றீர்கள்.ஆனால் மன்னரோ என்னைப் பார்க்க வந்தார் என்று..'' என கூறிவிட்டு சென்றார். எதையும் தேடி செல்லாதே தகுதி இருந்தால் எல்லாம் உன்னை தேடி வரும் !!!!

மூன்று விஷயங்கள்.!

மூன்று விஷயங்கள்.! 1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை... நேரம் இறப்பு வாடிக்கையளர்கள் 2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்... நகை பணம் சொத்து 3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது... புத்தி கல்வி நற்பண்புகள் 4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்... உண்மை கடமை இறப்பு 5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை... வில்லிலிருந்து அம்பு வாயிலிருந்து சொல் உடலிலிருந்து உயிர் 6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்... தாய் தந்தை இளமை 7.மூன்று பொருள்கள் திரை மறைவுக்கு உகந்தது... சொத்து ஸ்திரி உணவு 8.இந்த மூன்று பேர்களுக்கு மரியாதை கொடு... தாய் தந்தை ஆசிரியர்

புற்று நோயை முற்றிலும் அழிக்க, சிறந்த கை மருந்து :-

படம்
புற்று நோயை முற்றிலும் அழிக்க, சிறந்த கை மருந்து :- +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும், சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை, வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டு பிடித்து, குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும். எனக்கு தெரிந்து, மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை, அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது. அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது. இந்த சிகிச்சையை கண்டு பிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (F

மருத்துவம்

படம்

எதிர்ப்பு சக்தி ஏன் குறைகிறது?

படம்
எதிர்ப்பு சக்தி ஏன் குறைகிறது? அறிவோம்... எல்லையிலிருந்து நாட்டைப் பாதுகாக் கும் ராணுவம் போல், ஒவ்வொருவரின் உடலுக்குள்ளும் ஒரு எதிர்ப்பு சக்தி செயல்பட்டு நம் ஆரோக்கியத்தைப்  பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. இந்த நோய் எதிர்ப்பு சக்தி பற்றி தொற்றுநோய் சிறப்பு மருத்துவரான ராமசுப்பிரமணியன் விளக்குகிறார்... வெள்ளை அணுக்கள் எனும் போர்வீரர்கள் நம் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ரத்தத்தட்டுகள் ஆகியவை இருக்கின்றன. இதில் வெள்ளை அணுக்கள்தான் உடலுக்கு நோய்  எதிர்ப்பு சக்தியைத் தருபவை. அதனால், வெள்ளை அணுக்களுக்குப் ‘போர்வீரர்கள்’ என்று இன்னொரு பெயரும் உண்டு. இன்று சுற்றுப்புறச் சூழல்  மாசடைந்து இருக்கும் நிலையில் தண்ணீர், காற்று, உணவு, சக மனிதர்களுடன் பழகுவது என்று எந்த வடிவிலும் நோயை உண்டாக்கும் கிருமிகள் நம்  உடலுக்குள் ஊடுருவலாம். அந்த கிருமிகளை எதிர்த்துப் போராடி நம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வேலையையே வெள்ளை அணுக்கள்  செய்கின்றன. இரண்டு வகை சக்தி நோய் எதிர்ப்பு சக்தி இரண்டு வகையில் நமக்குக் கிடைக்கிறது. ஒன்று பிறவியிலேயே அமையும் சக்தி. மாசடைந்த க

உங்கள் கணினியில் 'வாட்ஸ் ஆப்' பயன்படுத்துவது எப்படி?

படம்
வாட்ஸ் ஆப் செயலியை மொபைல்களில் மட்டுமல்லாது இனி கணினியிலும் பயன்படுத்தலாம். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் ஆப் செயலி அனைத்து விதமான மொபைல் ஃபோன்களிலும் செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. குறுந்தகவல்களோடு, புகைப்படங்கள், வீடியோ பதிவுகள், குரல் பதிவுகள் என பலவற்றை வாட்ஸ் ஆப் மூலம் பகிரமுடியும். இந்தச் செயலியை மொபைல்களில் பயன்படுத்தும் அதே வேளையில் கணினியிலும் பயன்படுத்த பல பயனர்கள் ஏற்கனவே ஆர்வம் தெரிவித்திருந்தனர். தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் இதற்கேற்றார் போல, கணினியில் க்ரோம் ப்ரவுசரில் (Chrome) வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. கணினியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துவது எப்படி? 1. முதலில் மொபைலில் இருக்கும் வாட்ஸ் ஆப் செயலியை மேம்படுத்த (update) வேண்டும் 2. அடுத்து, கணினியில், க்ரோம் ப்ரவுசரில் https://web.whatsapp.com என்ற பக்கத்திற்கு செல்லவும். அந்த பக்கத்தில், ஒரு கியூ ஆர் கோட் (QR code) காண்பிக்கப்படும். 3. உங்கள் மொபைலில், வாட்ஸ் ஆப் செயலியை இயக்கி, அதில் மெனுவிற்கு செல்லவும். 4. மெனுவில் wh

கற்பூரவள்ளி - மருத்துவப் பயன்கள்

படம்
ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம். கற்பூரவள்ளி - மருத்துவப் பயன்கள் கற்பூரவள்ளி ( ஓம செடி ) பெரும்பாலும் விட்டிலேயே பூ தொட்டியில் வளர்க்கலாம் .இது மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி இப்போது உள் ள காலகட்டத்தில் நாம் இவ்வகையான மருத்துவ குணம் கொண்ட அறிய செடிகளை எல்லாம் மறந்து கொண்டு வருகிறோம் .நோயற்ற செல்வமே குறையற்ற செல்வம் என்று சொல்லுவார்கள் .அதை போல நாம் இவ்வகையான செடிகளை வளர்ப்பதன் மூலம் சில வகையான நோய்களை தடுக்கலாம் . கற்பூரவள்ளி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, புதராக வளருகிறது. வாசனை மிக்க இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. வேறுபெயர்கள் - ஓமவல்லி, ஒதப்பன்னா, பாசானபேதி, கண்டிரி போரேஜ். கற்பூரவல்லியை நம் வீட்டில் வளர்க்க 8 மாதங்கள் ஆகும். 8 மாதத்தில் இதன் இலைகள் பயன் தொடங்கும். இதன் தண்

இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!

படம்
இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!! (பூபதி லக்ஷமணன்) உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், சுறுசுறுப்பையயும் இஞ்சி கலந்த டீ-யின் மூலம் பெற முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? குளிர் மிகுந்த நேரத்தில் ஒரு கப் சூடான இஞ்சி டீயை விட சிறந்த பானம் எதுவாகவும் இருக்க முடியாது. அதிக அளவு வைட்டமின் சி, மெக்னீசியம், மற்றும் இதர கனிமங்களை கொண்ட இஞ்சி வேரை சாப்பிடுவது உடம்பிற்கு நன்மை விளைவிக்கும். மிகுந்த சுவையை கொடுக்கும் இந்த இஞ்சி டீ, உங்களுக்கு மிகவும் பிடித்த பானமாக மட்டுமல்லாமல் அது குளிர் காலத்தில் வரும் உடல் தொடர்பான பிரச்சனைகளுக்கு பெரும் தீர்வாகவும் உள்ளது. ஆகையால் இதை ஒரு மருந்துப் பொருளாகவும் இஞ்சியைக் கருதுகின்றனர். அதிலும் இஞ்சி டீ யை செய்ததும், அதனுடன் பெப்பர் மின்ட் (மிளகு கீரை), தேன் ஆகியவற்றை கலந்து டீயை அருந்தலாம். இதனால் இஞ்சியின் சுவை சற்றே மறைந்து காணப்படும். அதுமட்டுமில்லாமல் டீயின் சுவையும் மிகைப்படும். இப்போது நாம் ஏன் இஞ்சி டீயை அவசியம் குடிக்க வேண்டும் என்பதற்கான பதில் இதோ. குமட்டலை குறைக்கும் ஒரு கப் இஞ்சி டீயை குடிப்பதன் மூலம் குமட்டலை குறைக்க முடியும். வெளியே

இயற்கையான வயகரா – ஜாதிக்காய்..!!

படம்
இயற்கையான வயகரா – ஜாதிக்காய்..!! பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயகராவாக பயன்படுத்தப் பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம். உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் :- ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். விந்து முந்துதலை தவிர்க்க மூலிகைகள் பல உள்ளன, அதில் மிக எளிதாக மிகவும் பயனுள்ள மூலிகை ஜாதிக்காய். தாம்பத்தியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் உபயோகித்தாலே போதும். மேலும் சில குறிப்புகள் :- ஜாதிக்காயை அரைத்து தொப்புளைச் சுற்றி வீட்டில் உள்ள சில பாட்டிமார்கள் தடவிக்கொள்ள அறிவுறுத்துவார்கள். ஏன்

Computer or Pendriver'வில் வைரஸ்

படம்
உங்களுடைய Computer or Pendriver'வில் வைரஸ் அல்லது Files எல்லாம் மறந்து விட்டதா ? கவலை வேண்டாம். அஸ்ஸலாமு அலைக்கு & வணக்கம் இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு அதாவது Pen-driver தொடர்பான பதிவு இன்று எல்லோருக்கும் இருக்கும் பிரச்சினை சில சந்தர்பங்களில் உங்களுடைய Pen-Driver உள்ள Files எல்லாம் வைரஸ் தாக்கி அழிந்து போறது அல்லது உஞ்களுக்கு தெரியாமல் ஊந்க்கல்டுஐய Pen-Driver உள்ள சில Files எல்லாம் மறைந்து அதை எவ்வாறு நாம் மீள பெறுவது என்று இருந்தரு பாப்போம். முதலில் இந்த Application Download செய்து கொள்ளுங்கள் அதுக்கு பிறந்து இந்த Application ஓபன் செய்து கொள்ளுங்கள் நான் சும்மா என்னுடைய pendriver வைரஸ் Clean பண்ணி பாக்குறன் முதலில் Add என்று இருக்கும் இடத்தில நீங்கள் எடுக்க இருக்கும் Files select செய்து கொல்லுங்கள் உதாரண்மாக : நான் pendriver Select செய்துள்ளேன் அதன் பின்னர் உங்களுடைய Files எடுக்க விரும்பும் விதம் அதாவது வைரஸ் & மறந்துவிட்டதா ? அவ்வவுதான் இப்ப உங்களுடைய Pendriver ஒஎப்ன் செய்து பாருங்கள் எல்லாம் இருக்கும்

உடல் எடையை குறைக்க வேண்டுமா?

படம்
உடல் எடையை குறைக்க வேண்டுமா? பச்சை பயிறு சாப்பிடுங்க பருப்பு வகைகளை அடிக்கடி உண்ணும் போது ஏராளமான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன. குறிப்பாக பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல நன்மைகளை பெறலாம். பச்சை பயிறு உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு, சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளையும் சரி செய்கிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பச்சை பயறு உதவுகிறது. எனவே அன்றாடம் பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்து வாருங்கள். சத்துக்கள் நிறைந்தது பச்சை பயற்றில் இரும்புச்சத்து வளமாக உள்ளது. நீங்கள் இரும்புச்சத்து குறைபாட்டினால் அவஸ்தைப்பட்டால், அன்றாட உணவில் பச்சை பயறை சேர்த்து வாருங்கள். இதனால் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைத்து, இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பில் இருந்து தப்பிக்கலாம். சரும புற்றுநோய் பச்சை பயறு சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். அன்றாடம் வெளியில் அதிகம் சுற்றுவோர், உணவி

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா

படம்
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ் நாம் ஆரோக்கியமாக இருக்க ஹீமோகுளோபின் மிக முக்கிய பங்கை வகிப்பதால், இரத்தத்தில் அதனை இயல்பான அளவில் பராமரிக்க வேண்டியது அவசியமாகும். ஹீமோகுளோபின் என்பது நம் சிவப்பு இரத்த அணுக்களில் உள்ள இரும்புச்சத்து நிறைந்த புரதமாகும். நம் உடல் முழுவதும் ஆக்சிஜனை கொண்டு செல்லும் பொறுப்பு இந்த புரதத்துடையதாகும். இது வயது வந்த ஆண்களுக்கு 14 - 18 மி.கி./டெ.லி. மற்றும் வயது வந்த பெண்களுக்கு 12 - 16 மி.கி./டெ.லி இருக்க வேண்டும். பல நேரங்களில், சிவப்பு ரத்த அணுக்கள் குறைவாக இருப்பதால் ஹீமோகுளோபினும் குறைந்துவிடும். அதனால் ஹீமோகுளோபின் குறைவிற்கு பின்னணியில் உள்ள காரணத்தை பொறுத்து, அதனை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான இயற்கையான வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். போலிக் அமிலம் நிறைந்த உணவுகள் சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க தேவையாக இருப்பது பி-காம்ப்ளக்ஸ் வைட்டமினான ஃபோலிக் அமிலமாகும். அதனால் ஃபோலிக் அமில குறைபாடு இருந்தால், ஹீமோகுளோபின் அளவு தானாகவே குறைந்து விடும். அதனால் ஃபோலிக் அமிலம் வளமையாக உள்ள பச்சை இல்லை காய்கறிகள், ஈரல், அ

உப்பு தண்ணீரில் குளிப்பதால் கிடைக்கும் சூப்பரான நன்மைகள்

படம்
உப்பு தண்ணீரில் குளிப்பதால் கிடைக்கும் சூப்பரான நன்மைகள் உப்பு தண்ணீரில் தொடர்ச்சியாக குளித்து வரும் போது உடல் ரீதியான மற்றும் மனரீதியான நன்மைகள் கிடைக்கின்றன. சாதாரண தண்ணீரில் குளிக்கும் போது உடலில் உள்ள கிருமி தொற்று நீங்குவதற்கு சாத்தியம் இல்லாமல் போகலாம். ஆனால் உப்பு தண்ணீரில் குளிக்கும் போது உடலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் அதன் மூலம் உண்டாகும் தொற்றுகள் ஆகியவை பாதிப்பை ஏற்படுத்துவதை தவிர்க்கலாம். இளமையான தோற்றம் உப்பு தண்ணீர் குளியலை தொடர்ந்து செய்து வந்தால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் தொய்வுகள் குறையும். இது சருமத்தை மென்மையாக்கும். இது சருமத்தை கொழுக்க வைத்து சரும நீர்ச்சத்தை சமநிலைப்படுத்தும். பாத தசைகளுக்கு பயன் அளிக்கும் பாதங்களில் தசை தளர்ச்சி மற்றும் செருப்பால் கொப்புளங்கள் கூட ஏற்பட்டு, அதனால் நீங்கள் அவதிப்பட்டு வரலாம். உப்பு தண்ணீரில் குளித்தால், தசை வலியும் விறைப்பும் குறையும். மேலும் பாதத்தில் ஏற்படும் நாற்றத்தையும் போக்கும். சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும் உங்கள் சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருப்பது மிகவும் நல்லதாகும். உப்பு தண்ணீர

ஈஸியான மருத்துவ குறிப்புகள்: ட்ரை பண்ணி பாருங்க....

படம்
ஈஸியான மருத்துவ குறிப்புகள்: ட்ரை பண்ணி பாருங்க.... l பொதுவாக ஜலதோஷம், காய்ச்சல் போன்றவை நம்மை தாக்கினால் உடனே நாம் மருத்துவர்களை நாடுகிறோம். சில நேரங்களில் தலைசுற்றல் அல்லது வயிற்றுவலி போன்ற சில உடல் உபாதைகளுக்கு கூட மாத்திரை சாப்பிடுகிறோம். ஆனால் இது எல்லா நேரங்களிலும் ஆரோக்கியமானது என்ற உறுதியாக கூறமுடியாது. ஏனெனில் ரசாயன தன்மை மிகுந்த மாத்திரைகள் சில நேரங்களில் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும். எனவே வீட்டிலிருந்தபடியே சில மருத்துவ குறிப்புகளை நாம் தெரிந்து கொண்டு கையாள்வது நம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. எளிமையான சில மருத்துவ குறிப்புகள் * நெல்லி வற்றல்- சந்தனத்தூள்- கொத்தமல்லி மூன்றையும் தண்ணீரில் ஊற வைத்தபின் வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலை சுற்றல், கிறுகிறுப்பு முதலியன குறையும். * வெல்லத்தை கெட்டியாகப் பாகு வைத்து அதில் மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு உருட்டி வைத்தால் இருமல் வரும்போது வாயில் அடக்கிக் கொள்ள இருமல் நிற்கும். * மண் சட்டியில் உப்பை வறுத்துத் துணியில் கட்டி உப்பு ஒத்தடம் இரண்டு மூன்று வேளை கொடுத்தால் கழுத்து வலி நீங்கிவிடும். * நூல்கோலைத் த

ஈரல் நோய்களுக்கு பலன் தரும் முள்ளங்கி

படம்
ஈரல் நோய்களுக்கு பலன் தரும் முள்ளங்கி முள்ளங்கி நாம் சாதாரணமாக உணவாக பயன்படுத்துகிற ஒன்றுதான். எனினும் அதனுள் அடங்கியுள்ள மிகச்சிறந்த மருத்துவ குணங்களை நாம் அறியவில்லை. முள்ளங்கியில் மஞ்சள் முள்ளங்கி, சுவற்று முள்ளங்கி, சதுர முள்ளங்கி, வனமுள்ளங்கி, கெம்பு முள்ளங்கி என வேறு சில வகை முள்ளங்கிகளும் உண்டு. * முள்ளங்கி சாற்றோடு சர்க்கரை சேர்த்து உள்ளுக்கு கொடுப்பதால் குத்திருமல் குணமாகும். மேலும் பலவித ஈரல் நோய்களுக்கும் இது பலன் தரும். * முள்ளங்கியைப் பயிர் செய்து இரண்டு மூன்று இலைகள் வந்தவுடன் அந்த இலைகளில் ஒரு பிடி அளவு எடுத்து 2 முதல் 4 கிராம் அளவு சாதாரண சோற்று உப்பு சேர்த்து காலை, மாலை என 2 வேளையும் சாப்பிட்டு வர வெள்ளை வெட்டை என்கிற சிறுநீக மற்றும் பால்வினை நோய்களால் உண்டாகும் நீரடைப்பு நீங்கும். மலமும் வெளியேறும். * 50 முதல் 100 கிராம் வரையில் முள்ளங்கியை எடுத்து சாறு பிழிந்து குடித்து சிறுநீர் வர சிறுநீர் தாரளமாய் இறங்கும். * கிழங்கைப் பச்சையாகவோ, சமைத்தோ உண்பதால் சுவையின்மை நீங்கிப் பசி உண்டாகும். உணவையும் சீரணமாக்கும். * காலை, மாலை என இருவேளைகளும் முள்ளங்கி சாறு செய்து

பட்டுப் புடவையை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்

படம்
பட்டுப் புடவையை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ் பொதுவாக பட்டுப் புடவையை விரும்பாத பெண்களே கிடையாது என்று சொல்லலாம். அதிலும் தற்போது நம் நாட்டை விடவும் அயல்நாட்டு பெண்கள் பட்டுப் புடவை அணிவதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக தீபாவளி, பொங்கல் பண்டிகை போன்ற பண்டிகைகள் வந்துவிட்டால் ஜவுளிக்கடைகளில் இந்த பட்டுப் புடவையை தெரிவு செய்ய ஒரு பிரம்மாண்ட கூட்டமே இருக்கும். ஆனால் இதை பிற துணிகளை போல் துவைத்து மடிப்பது மட்டும் போதாது. இதை பாதுகாக்க சில வழிமுறைகளை நாம் கடைப்பிடிப்பது அவசியமாகும். சரியான பராமரிப்பு இல்லையேல் சில தினங்களிலேயே பட்டுப் புடவை பழைய புடவையாகிவிடும். பட்டுப் புடவையை பராமரிக்க சூப்பர் டிப்ஸ் பட்டுத் துணிகளை சோப்பைப் போட்டு நீண்ட நேரம் ஊற வைப்பதையும், அலசும் போது முறுக்கிப் பிழிவதையும் தவிர்க்க வேண்டும். அடித்துத் துவைப்பதும் கூடாது. துவைத்து உலர்த்தும் போது, வெயிலில் உலர்த்தாமல் நிழலில் காற்றில் படும்படி போடுவது நல்லது. பட்டுப் புடவையை இஸ்திரி செய்யும் போது அதன் மீது சுத்தமான வெள்ளைத் துணியைப் போட்டோ அல்லது புடவையைத் திருப்பி வைத்தோ, மிதமான சூட்டில் இஸ்திரி செ

உங்கள் குழந்தைகளின் தவறை புரிய வையுங்கள்

படம்
உங்கள் குழந்தைகளின் தவறை புரிய வையுங்கள் அடிக்கவோ திட்டவோ வேண்டாம் இன்றைய காலத்தில் குறும்பு செய்யாத குழந்தைகளை பார்க்கவே முடியாது. அவ்வாறு குறும்பு செய்யவில்லையென்றால் வீடே வெறிச்சோடி இருப்பது போல் இருக்கும். ஆனால் நிறைய பெற்றோர்கள் குழந்தைகளை அதிகம் எதையும் செய்யவிடாமல் தடுக்க முயற்சிக்கின்றனர். ஏனெனில் அவர்கள் எதாவது செய்ய போய், உடல் நலத்திற்கு ஏதேனும் நோய் வந்துவிடுமோ என்ற பயம் தான். அதற்காக சிறுவயதிலிருந்தே அவர்களை கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு, அவர்கள் ஏதேனும் குறும்போ அல்லது தவறு செய்து விட்டால், உடனே அவர்களை அடிப்பார்கள். ஏனெனில் அவர்கள் இன்னும் நமது முன்னோர்கள் சொன்ன பழமொழியான “ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது” என்பது தான். அதாவது குழந்தைகளை சிறு வயதிலேயே திருத்தாவிட்டால், அந்த பழக்கம் அவர்களிடமிருந்து மாறாமல் இருக்கும் என்பதற்காக, அவர்களை அடிக்கின்றனர். அவ்வாறு அடிக்கும் பெற்றோர்கள் கொஞ்சம் கூட குழந்தைகளது மனதை புரிந்து கொள்ளாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் குழந்தைகளை அடித்தால், அவர்கள் பிற்காலத்தில் எவ்வாறு கெட்டவர்களாக மாறுவார்கள் என்பது பற்றி புரியாமல் இருக்