குழந்தை பாடல் - இன்னிசை பாடி வரும்...


Posted: 09 Jan 2010 05:37 PM PST
இரண்டரை ஆண்டுகளுக்கு முன், என் தம்பிமகன் தைசீர் அஹமது பிறந்த போது, நான் பாடிய தாலாட்டு!

அன்புடன் ஆட்சி செய்ய
ஒரு கண்மணி வந்ததடா...
பாசத்தைக் குழைத்தெடுத்து
ஒரு பைங்கிளி பூத்ததடா...

உன்முகத்தைப் பார்க்கையில்,
உள்ளம் கொள்ளை போகுதே - தேனின்
சுவையைப் போலவே
கண்ணன் குரலும் இனிக்குதே...
அத்தை பாடிடும்
ஒரு பாடல் தான்
அதைப் பாடப் பாட
பிஞ்சு மனது குளிர்ந்திடுமே!

(அன்புடன்)

கண்ணுக்கு கண்ணாக
நீ பிறந்து வந்தாயே!
முகத்தோடு முகம் சேர்த்து,
கனிமுத்தம் தந்தேனே!
பூஞ்சிட்டை பார்த்திட,
மனம் பரவசமானதே!
தம்பியின் முகத்திலே
அட, பெருமை பொங்குதே!!
தொட்டில் நானும் ஆட்டுகிறேன்,
ஆரீ ராரி ராரோ!
விழிகள் மூடி கனவுடனே,
நீயும் தூங்கிடுவாய்!!
அத்தை பாடல் கேட்டு
தாளம்போடு இளமகனே!!

(அன்புடன்)

சந்தன சிலை போல,
இளவரசன் கண்டேனே!
உயிருக்கு உயிராக,
உனைக் கொஞ்சி ரசித்தேனே!!
பெற்றவர் வாழ்க்கையில்
தனி அர்த்தம் சேர்ந்தது!
உன்முகம் ரசிப்பதே
புது வேலை ஆனது!!
செல்லக் கண்ணன் தூங்கிடவே,
ஆரீ ராரி ராரோ!!
மெல்ல மெல்ல பாடுகிறேன்,
கண்கள் மூடிடுவாய்!
அத்தை பாடல் கேட்டு,
தாளம் போடு இளமகனே!!

(அன்புடன்)

-சுமஜ்லா.

ஒரிஜினல் பாடல் இதோ:

இன்னிசை பாடிவரும்
இளங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை

ஒரு கானம் வருகையில்
உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி
கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே
ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி
தேடும் மனசு தொலைகிறதே

(இன்னிசை)

கண் இல்லையென்றாலும்
நிறம் பார்க்க முடியாது
நிறம் பார்க்கும் உன் கண்ணை
நீ பார்க்க முடியாது
குயிலிசை போதுமே
அட குயில் முகம் தேவையா
உணர்வுகள் போதுமே
அதன் உருவம் தேவையா
கண்ணில் காட்சி தோன்றிவிட்டால்
கற்பனை தீர்ந்துவிடும்
கண்ணில் தோன்றா காட்சி என்றால்
கற்பனை வளர்ந்துவிடும்
ஆடல் போலத் தேடல் கூட
ஒரு சுகமே

(இன்னிசை)

உயிர் ஒன்று இல்லாமல்
உடல் இங்கு நிலையாதே
உயிர் என்ன பொருள் என்று
அலை பாய்ந்து திரியாதே
வாழ்க்கையின் வேர்களோ
மிக ரகசியமானது
ரகசியம் காண்பதோ
மிக அவசியமானது
தேடல் உள்ள உயிர்களுக்கே
தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ருசியிருக்கும்
ஆடல் போல தேடல் கூட
ஒரு சுகமே

(இன்னிசை)


Posted: 19 Nov 2009 03:45 AM PST

ஆழ்மனதில் கவி தோன்றும் நேரம்
ஆனந்தம் கூத்தாடும் காலம்
வானத்தில் மிதக்கின்ற மேகம்
போல் பஞ்சாய் லேசான தேகம்!

காதல் தீ கங்கான திப்போ,
நீர் ஊற்றி நீ அணைத்தால் தப்போ?!
மாதவளை மயக்குவதும் எப்போ,
மனம் வென்ற ஜெயத்தால் பூ ரிப்போ??!

கண்ணிரண்டும் கனவோடு பேசும்
கால் கொலுசை நீ தீண்ட கூசும்!
மனம் தொட்ட மச்சானின் நேசம்,
மலர்தோட்டம் போல் வாசம் வீசும்!!

உணர்வெல்லாம் மெழுகாக உருகும்,
உதவாமல் பழுதாகி மருகும்!
பெண்மனது உன் நினைவால் கருகும்,
பொன்வண்டு பூந்தேனைப் பருகும்!!!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!