எதிர்கால வாழ்விலே...


Posted: 11 Jan 2010 08:43 AM PST

பள்ளி இறுதி நாட்களில் எழுதியது!

காலங்கள் கைவிட்டு நழுவிவிடும்
கோலங்கள் உருமாறி மறந்து விடும்!
நம்பாடம் இஃதோடு மறைந்து விடும்,
தம்வீடு போதுமென்ற நினைப்பு வரும்!

பாடங்கள் மனதினின்று அகன்று, பல
வேடங்கள் கண்டு மனம் மயங்கி நிற்கும்!
தாகத்தில் உணர்விழந்து அறிவு மங்கி,
வேகங்கள் விளையாட்டு ஆரம்பிக்கும்!

சோகங்கள் கைகொட்டி சிரிக்கும் போது,
மோகங்கள் விலகிநின்று முதிர்ச்சிதரும்!
உண்மைகள் எழுந்து வந்து பேசும் பின்பு,
கண்ணிமைகள் கனவினின்று மீண்டு வரும்!

நிழலையும் நிஜத்தையும் பகுத்தறிந்தால்,
விழலிலே விழாத விதையாகலாம்!
பண்பாடும் என்மனதின் கேள்வியிது,
அந்நாளில் இந்நாட்கள் மறந்திடுமோ?!

-சுமஜ்லா.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!