ஆற்று மணலில்

சாபம்
அசிங்கமாக
இருப்பதாய்ச் சொல்லி
ஆற்றங்கரையிலிருந்து...
அப்புறப்படுத்தினார்கள்
எங்கள் வீடுகளை.

அழகூட்டுவதாய்ச் சொல்லி
அங்கேயே
கட்டிக்கொண்டார்கள்
அவர்களின் மாடிகளை.
கடலுக்குப் போய்விடும்
கவலை வேண்டாமெனச் சொல்லி
கழிவுகளைக் கொட்டினார்கள்.
குளிர்பான ஆலைக்கு
வேண்டுமென
குழாய் பதித்து
நீரை உறிஞ்சினார்கள்.
அப்போதெல்லாம்
ஆற்று மணலில்
அழுது புரண்டபடி
'மாரியாத்தா கேட்பாள்’ என
மண்ணை வாரித் தூற்றுவாள்
அம்மா.
இன்று
அவள்
வாரித் தூற்றிய மண்ணையும்
வாரிக்கொண்டு போகிறார்கள்
லாரிகளில்.
என்ன செய்வார்கள் இனி...
அம்மாவும்
மாரியாத்தாவும்!
- கண்மணி ராசா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!